districts

img

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் கோரிக்கை

சேலம், ஜூன் 8- போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட 34 ஆவது ஆண்டு பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்டத்தின் 34 ஆவது ஆண்டு பேரவை கோட்ட தலை வர் கே.செம்பன் தலைமையில் நடைபெற்றது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் எம்.ரகுநாதன் நினைவு அரங் கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை துணைத்தலைவர் சி.கிருஷ்ணன் ஏற்றி வைத்தார். துணை பொதுச்செயலாளர் எம். குணசேகரன் வரவேற்றார். சிஐ டியு மாவட்ட செயலாளர் டி.உதய குமார் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். துணை பொதுச்செயலாளர் டி.செந்தில் குமார், பொதுச்செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் எம்.சேகர் ஆகியோர் அறிக் கையை முன்வைத்தனர். பேர வையை வாழ்த்தி சாலை போக்கு வரத்து சம்மேளன துணைத்தலை வர் எஸ்.கே.தியாகராஜன், துணை  பொதுச்செயலாளர் பி.தயானந் தம், சிஐடியு மாவட்ட பொருளா ளர் வி.இளங்கோ, அரசு விரைவு போக்குவரத்து தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் என்.முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சம்மேளன துணை பொதுச்செயலாளர் ஜான்சன் கென்னடி சிறப்புரையாற்றினார்.  

இதில், போக்குவரத்து துறை யில் உள்ள காலிப்பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண் டும். 14 ஆவது ஊதிய ஒப்பந் தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலா ளர்களுக்கு ஓய்வு காலப்பயன் களை ஓய்வு பெறும் நாளே வழங்க வேண்டும். அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் வார ஓய்வு நாள் வழங்க வேண்டும். இரட்டிப்பு பணியை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து கழகங் களின் வரவுக்கும், செலவுக்கும் ஆன வித்தியாச தொகைக்கு பட் ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். மகளிர் இலவச பயணத்திற்கான பேட்டா டெக்னிக்கல் இன்சென் டிவ் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய கோட்ட தலைவராக கே.செம்பன், பொதுச்செயலாள ராக ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொரு ளாளராக எம்.சேகர் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். முடிவில் சம்மேளனக்குழு உறுப்பினர் ஜி.கார்த்திக் நன்றி கூறினார்.