districts

img

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில மாநாடு

சென்னை, ஏப்.22- விவசாயிகளையும், ஆலைத் தொழி லாளர்களையும் பெருமளவில் அணி திரட்டு வோம் என மூத்த தொழிற்சங்கத்தலை வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான வே.மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சென்னை யில் நடைபெற உள்ளது. அதையொட்டி வர வேற்புக் குழு கூட்டம் சென்னை திருவல்லிக் கேணியில் புதனன்று (ஏப்.20) நடைபெற் றது. வடக்கு மண்டல செயலாளர் ஆர்.ரவிக் குமார் தலைமை தாங்கினார். தெற்கு மண் டல செயலாளர் ஏ.முருகானந்தம் வரவேற் றார்.

வரவேற்புக்குழு அமைப்பு

இதைத்தொடர்ந்து வரவேற்புக்குழு தலைவராக மின் ஊழியர் மத்திய அமைப் பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான வே.மீனாட்சி சுந்தரம், செயலாளராக ஆர். ரவிக்குமார், பொருளாளராக ஏ.முருகா னந்தம், துணைத் தலைவர்களாக வி.குமார், எம்.தனலட்சுமி, கே.அருள்செல்வன், எம். சாலட், விஜயலட்சுமி, என்.பால்ராஜ்,  இணைச் செயலாளர்களாக சி.திரு வேட்டை, கே.ரவிச்சந்திரன், எம்.தயாளன், டி.ஸ்ரீதர், டி.அறிவழகன் உள்ளிட்ட 222 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டிற்கான இலட்சினையை வே. மீனாட்சிசுந்தரம் வெளியிட்டு பேசுகையில், தமிழக அரசியல் களத்தில் ஒரு வலுவான அரசியல் சக்தியாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாற வேண்டும். தமிழகத் தில் உள்ள சாதராண தொழிலாளர்களும், விவசாயிகளும் மின்சார வாரிய தொழிலா ளர்களின் போராட்டங்களை கூர்ந்து கவனிப் பவர்கள். அவர்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. எனவே எளிதில் உங் களால் விவசாயிகளை திரட்ட முடியும். புதிய முழக்கங்களோடு, புதிய உக்தியை உருவாக்கக் கூடிய, விவசாயிகளை, விவ சாயத் தொழிலாளர்களை, ஆலைத் தொழி லாளர்களை திரட்டக் கூடிய மாநாடாக இந்த மாநாடு அமைய வேண்டும். தமிழக அரசிய லிலே மின்வாரிய தொழிலாளர்கள் ஜன நாயகத்தை பாதுகாப்பார்கள், விவசாயத் தொழிலாளர்களை பாதுகாப்பார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதை நோக்கிய பணிகளை முன்னெடுப்போம், என்றார். மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் பேசு கையில், வேலை வாய்ப்பாற்ற இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பை உரு வாக்கு, விவசாயிகளை, பொதுத்துறை நிறு வனங்களை பாதுகாப்போம் என்ற முழக்கத் தோடு மாநாட்டு தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வோம், அவர்களின் ஆதர வையும் திரட்டுவோம், என்றார்.

வலுவான போராட்டம்

பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் பேசுகையில்,  இன்றைய அரசியல் சூழலில் இந்த மாநாடு சென்னையில் நடைபெறு வது மிகவும் பொருத்தமானது. செந் தொண்டர்கள் அணிவகுப்புடன் இந்த மாநாடு நடைபெற உள்ளது. வர்க்க ஒற்றுமையை, தொழிற்சங்க ஒற்றுமையை பலப்படுத்து வது குறித்த மாநாடாக இந்த மாநாடு அமை யும். அனைத்து தரப்பு தொழிற்சங்கங்களை யும் இணைத்து வருங்காலங்களில் ஒரு வலு வான போராட்டத்தை முன்னெடுத்து வாரிய உரிமைகளையும், மின்சார வாரியம் உள் ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை பாது காப்போம் என்றார். முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங் கல்பட்டு, அனல்மின் ஊழியர்கள் சார்பில் மாநாட்டு நிதிக்கு முதல் தவணையாக 13  லட்ச ரூபாய் நிதி வரவேற்புக்குழு தலைவர்  வே.மீனாட்சி சுந்தரத்திடம் வழங்கினார் கள். மாநில செயலாளர் எம்.தயாநிதி நன்றி  கூறினார்.