districts

img

போனஸ் பேச்சுவார்த்தையை துவங்கிடுக

சேலம், அக்.5- போனஸ் பேச்சுவார்த் தையை உடனடியாக  துவங்க வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு சேலம் உருக்காலை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் உற் பத்தி மற்றும் தொழிலாளர் உற்பத்தி திறன்  உயர்ந்துள்ள சூழ்நிலையில் கூடுதலான போனஸ் வழங்க வேண்டும். போனஸ் பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு பாதகமான  போனஸ் திட்டத்தை செயில் நிர்வாகம் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சேலம் உருக் காலை தொழிலாளர்கள் சங்கத்தினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையின் நுழைவாயில் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத்தலைவர் பி.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். இதில் சிஐடியு சேலம் உருக்காலை சங்க பொதுச்செயலாளர் கே.பி.சுரேஷ்குமார் மற்றும் ஆலை தொழி லாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.