districts

img

சேலம்: காதலனை கரம் பிடித்த இலங்கை பெண் தவிப்பு

சேலம், பிப்.21- கடல் கடந்து வந்து கரம் பிடித்த இலங்கை பெண்,  விசா காலம் முடிவடைவ தால் காதல் கணவருடன் சேர்ந்து வாழ முடியாமல் தவிப்பிற்குள்ளாகி உள் ளார். சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த சரவணன் என்பவ ரும், இலங்கையை சேர்ந்த நிஷாந்தினி என்பவரும் சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், காத லரை கரம் பிடிப்பதற்காக நிஷாந்தினி, கடந்த 2 வாரங் களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் சேலம் வந்துள்ளார். பின் னர் இருவரும் ஓமலூர் அருகே  பஞ்சுகாளிப்பட்டியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களது திருமணத்தை பதிவு செய்ய இரு வரும் அரசு அலுவலகத்தை நாடியபோது, திருமணத்தை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் இருப்பதால் தடையில்லா சான்று கேட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். இத னால் செய்வதறியாது திணறிய காதல் தம்பதியினர் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித் துள்ளனர். இந்நிலையில், விசா காலம் விரைவில் முடிவடைவ தால் காதலனை கரம் பிடித்தபோதும், சேர்ந்து வாழ முடியா மல் அந்த பெண் தவிப்பிற்குள்ளாகி உள்ளார்.