districts

img

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக சிறப்பு கருத்தரங்கம்

ஈரோடு, ஆக.31- பொது சிவில் சட்டம் மற் றும் நீட்டிற்கு எதிராக சிறப்பு கருத்தரங்கினை நடத்துவது என்று தமிழக மக்கள் ஒற் றுமை மேடை முடிவு செய் துள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட் டம் ஒற்றுமை அரங்கில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலக்குழு உறுப் பினர் கே.துரைராஜ் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சிறப் புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜமேஷ், மாவட்ட அமைப்பாளர் சி.முருகே சன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில உதவித்தலைவர் ப.மாரிமுத்து, சி.பரமசிவம் மற்றும் பி.சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். இக்கூட்டத்தில், செப்.24 ஆம்  தேதியன்று பொது சிவில் சட்டம், நீட் தேர் விற்கு எதிராக ஈரோட்டில் சிறப்பு கருத்தரங் கம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.