districts

ஹிஜாப் விவகாரம்: சமூக நல்லிணக்க மேடை ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப்.12- கர்நாடகா மாநில கல்லூரிக ளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்ததை கண்டித்து சமூக நல்லிணக்க மேடை சார்பில் அரூர் வட்டாட்சியர் அலுவ லகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கர்நாடகா மாநிலத்தில் முஸ்லீம் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்திருப்பதை திரும்ப பெற வேண்டும். மத அடிப் படையில் மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை பாஜக அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார்.  இதில் விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் மண்டல செயலா ளர் பொ.மு.நந்தன், திராவிடர் கழக  மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், தமுமுக மாநில பொறுப்பாளர் ஒய்.சாதிக் பாஷா, மனிதநேய மக்கள் கட்சி யின் மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் என்.சுபேதார், இந்திய கம்யூ.கட்சி மாவட்ட துணைச் செயலாளர் கா.சி.தமிழ்க்குமரன், சுன்னத் ஜமாத் முத்தவல்லி ஏ.எம். எஸ். சபீர் அகமத், செயலர் ஏ.அப் துல் ரவூப், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் சூர்யா து.தனபால், முன்னாள் நகர செயலாளர் முல்லை ரவி, இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் எம்.ராஜேந்திரன், வஞ் சித் பகுஜன் அகாடி மாநில இணை  பொதுச்செயலாளர் ஆர்.பழனி சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.