அவிநாசி, டிச.3 – அவிநாசியில் மாற்றுத்தி றனாளிகளுக்கு திங்களன்று திறனாய்வு ஊக்குவிப்பு போட்டி நடைபெற்றது. உலக மாற்றுத்திறனா ளிகள் தினத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை சார்பில் அவி நாசி அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் அவிநாசி நல்லது நண்பர் கள் அறக்கட்டளை இணைந்து பள்ளி அளவி லான மாற்றுத்திறனாளி குழந்தைகள் ளுக்கான கலை நிகழ்ச்சிகள் திறனாய்வு ஊக் குவிப்பு போட்டிகள் நடத்தினர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளையும் பாராட்டும் வகையில் பரிசுப்பொருட்கள் வழங்கினர். இவ்விழாவில் நல்லது நண்பர்கள் அறக் கட்டளை தலைவர் ரவிக்குமார், செந்தில், ஜீவானந்தம். கார்த்திக் கோபாலகிருஷ்ணன் வழக்கறிஞர் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். பள்ளி சார்பாக அவிநாசி வட்டார வள மைய மேற்பார்வையாளர், வட்டார ஒருங்கி ணைப்பாளர், ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப் பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் மற் றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.