districts

img

பொழுதுபோக்கு வசதி இல்லாத திருப்பூரில் பராமரிப்பில்லாமல் சுருங்கும் வெள்ளி விழா பூங்கா

திருப்பூர், பிப்.6 - திருப்பூர் மாநகரில் 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வெள்ளி விழா பூங்கா பராம ரிப்பு இன்றி உள்ளது. குழந்தைகள் விளை யாடும் உபகரணங்கள் துருப்பிடித்து காணப்படுகின்றன. ஒளிப்படம் திரையிடும்  ப்ரொஜெக்டர் அறை திறக்கப்படாமல் உள் ளது. வார நாட்களில் இடப்பற்றாகுறையால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே பூங் காவை விரிவாக்கம் செய்து புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூரில் பனியன் உற்பத்தி மற்றும்  அதனை சார்ந்து பல தொழில்கள், பாத்திர  பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்க ளில் பணிபுரிவதற்காக வெளி மாவட்டங் கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்க ணக்கானோர் வருகின்றனர். தொழில் நகர மான திருப்பூரில் 10 லட்சத்திற்கும் மேற்பட் டோர் குடும்பத்துடன் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனர். வாரம் முழுவதும் கடுமை யாக உழைக்கும் இந்த மக்களுக்கு பொழுது  போக்கிற்காக திரையரங்கள் மட்டுமே உள் ளன.  இதையடுத்து செல்லும்படி மாநகரில் நொய்யல் கரையோரம் அமைந்துள்ள மாநகராட்சி வெள்ளி விழா நினைவு பூங்கா 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சியில் தொடங்கப்பட்ட முதல் பூங்கா இது. தற் போது நுழைவு கட்டணமாக பெரியவர்க ளுக்கு ரூ.20ம், சிறுவர்களுக்கு ரூ.10ம் வசூ லிக்கப்படுகிறது. இதில், குழந்தைகள் விளையாடுவதற்கு சிசா, தூறி, ராட்டினம்  சுழலும் கார், படகு சவாரி  உள்ளிட்டவையும்,  பெரியவர்களுக்கு பெரிய ராட்டினங்களும் உள்ளன. சனி, ஞாயிறு உள்ளிட்ட விடு முறை தினங்களில் இப்பூங்காவிற்கு 3ஆயி ரம் முதல் 4ஆயிரம் பேர் வரை வந்து  செல்கின்றனர். எனவே மக்கள் வருகைக்கு  ஏற்றவாறு பூங்காவை விரிவுபடுத்த வேண் டும் என மக்கள் கோருகின்றனர்.  பராமரிப்பு இல்லாத உபகரணங்கள்: வார இறுதி நாட்களில் அதிக அளவில்  மக்கள் வருவதால், குழந்தைகள் விளையா டுவதற்கு உபகரணங்கள் போதுமான அளவு இல்லை என்ற நிலையில் தற்போது,  இருக்கும் உபகரணங்களும் உடைந்து காணப்படுகிறன. சீசாவில் அமரும் இருக்கை இல்லை. சர்க்கஸ் ஓரங்கள் உடைந்துள்ளன. ராட்டினம் துருப் பிடித் துள்ளது. இதனால், குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படக்கூடும். மேலும், குகைக் குள் அமர்ந்து திரைப்படங்கள், குறும்படங் கள் உள்ளிட்டவைகள் காணும் அனுப வத்தை வழங்கும் வகையில், உருவாக்கப் பட்ட  ஒளிப்பட அறையும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. உள்ளிருக்கும் ப்ரொ ஜெக்டர், வெண்திரை, இருக்கைகள் தூசு படிந்து மாசடைந்து கிடக்கிறது. உடைந்து போன விளையாட்டு சாதனங்கள், தண்ணீர்  இல்லாத நீரூற்றுடன் பூங்கா காணப்படுகி றது. 

பாலப் பணிகளுக்குக்காக எடுக்கப்பட்ட பூங்கா இடம்:

ஏற்கனவே மக்கள் தொகைக்கு ஏற்ற வாறு பூங்காவில் இடம் இல்லாத நிலையில்,  சுரங்கப்பாதை பணிகளுக்காக பூங்காவின் ஒரு பகுதி இடம் கையகப்படுத்தப்பட்டு உள் ளது. இதனால் பூங்கா மேலும் சுருக்கப்பட் டுள்ளது. வார இறுதி நாட்கள் விடுமுறை நாட் களில் பார்கிங் இடம் போதுமான அளவு இல்லை. இதுகுறித்து பூங்காவிற்கு வருகை தந்த வர்கள் சிலர் கூறுகையில், தற்போது உள்ள  சூழ்நிலையில் ஒரு குடும்பம் திரையரங்கம்  சென்றால் குறைந்தது 2 ஆயிரம் ரூபாய்  செலவாகும். குழந்தைகளும் திரைப்ப டங்கள் பார்க்க பெரிதாக விரும்புவதில்லை.  இது போல் பூங்காவிற்கு மகிழ்ச்சியாக ஒரு  நாள் விளையாடி செல்வார்கள். ராட்டினங் கள் உள்ளிட்ட உபகரணங்கள் இருந்தாலும்,  ஒரே நேரத்தில் அதிகமானோர் விடுமுறை நாட்களில் வருவதால் குழந்தைகளால் போதுமான அளவு விளையாட முடிய வில்லை. கூட்ட நெரிசலால் கொஞ்சம் நேரத் தில் பூங்காவில் இருந்து வெளியே செல்ல வேண்டியுள்ளது. எனவே தற்போது உள்ள  சூழலுக்கு ஏற்றவாறு பூங்காவை விரிவுப டுத்த வேண்டும் என்றனர். சூழலியல் பூங்காவில், இருக்க வேண் டிய கட்டமைப்புக்கள் ஏதும் முறையாக பரா மரிக்கப்படாமல், பெயரில் மட்டுமே இது சூழ லியல் பூங்கா என்று உள்ளது. எனவே இதை  பயன்படுத்தி கொண்டு பெரும் தனியார் நிறு வனங்கள் பொழுதுபோக்கு அம்சங்களு டன் கண்காட்சி என்கிற பெயரில் வணிக  நோக்கில் பணம் சம்பாதித்து வருகின்றன.  மேலும், பூங்காக்களை தனியாருக்கு ஒப்பந் தம் விடாமல், மாநகராட்சி நிர்வாகம் விரிவுப டுத்தி நேரடியாக பாராமரிக்க வேண்டும், என்று தெரிவித்தனர்.