districts

வாயடித்தால் வளர்ச்சி வராது மிஸ்டர் அண்ணாமலை ஐபிஎஸ்

எள்ளுக்கும், நெல்லுக்கும் வித்தியாசம் தெரியாதவர், வளர்ச்சி குறித்து வாயடிப்ப தெல்லாம் வெட்டிப்பேச்சு என்பதை கோ இன் டியா கூட்டத்தில் அண்ணாமலையின் பேச்சு நிரூ பித்துள்ளது.  கடந்த வெள்ளியன்று ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள கோ இன்டியா அரங்கில், பாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன் தொழிற்துறை யினர் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பங் கேற்ற தொழில்முனைவர் சி.தனபால் தீக்கதிர் நாளிதழுக்காக நம்முடன் பகிர்ந்தவை... போசியா என்று அழைக்கப்படும், சிறு தொழில் செய்வோரின் கூட்டமைப்பினர் அண்ணாமலையி டம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித் தனர். இதனைப்பெற்றுக்கொண்ட அவர் பேசத் துவங்கினார். நீங்கள் எடுத்துக்கூறிய கோரிக்கை களை நான் முன்பே அறிவேன். மோடி ஜி மட்டும் தான் கடந்த 500 ஆண்டுகளில் உலகத்துக்கு கிடைத்த ஒரே தலைவர் என்றார்.

 தொடர்ந்து, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சராசரியாக 3 சதவீதம் வளர்ச்சியிருக்கும் என அவர் ஒப்புக்கொண்டார். அதன் பின் நாங்கள் கொடுத்துள்ள திட்டம் பற்றி பேசிய அவர், தற் போது 3.5 மில்லியன் டாலர் ஜிடிபி உள்ள இந்தியா வின் பொருளாதாரத்தை 40 ஆம் ஆண்டுக்குள் 50  ட்ரில்லியன் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவோம் என வீர வேசமாக பேசினார்.  அப்போது எனக்கு தோன்றியது ஒன்று மட் டுமே. 3.5 ட்ரில்லியன் பொருளாதாரம் இருக்கும் போதே சிறு தொழில்கள் இப்படி நாசமாய் போய்க்  கொண்டுள்ளது. இவர் சொல்வதைப் போல 25, 50 ட்ரில்லியன் என ஆனால், இந்தக் கோவை மாவட்டத்தில் சுயம்புவாய் வளர்ந்த எங்கள் சிறு தொழில் முனைவோர்கள் இந்த கோவையில் இருப்பார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.  பின்னர், பவுண்டரி தொழில் பற்றி பேசுகை யில், இன்னும் சில வருடங்களில் வடமாநில தொழி லாளர்கள் இங்கு வரமாட்டார்கள். இங்கிருக்கும் பவுண்டரிகள் எல்லாம் ஆட்டோமேசன், ரோபோட் டிக் பயன்படுத்த வேண்டும் என்றார். என்னுடன் இருந்த தொழில்முனைவர்கள் என் செவியருகே குசு குசுத்தனர், இவரு நமக்கு உதவி செய்ய வர வில்லை, நம்மிடையே இருக்கும் தொழிலை எப் படி பன்னாட்டு கார்ப்ரேட்டுகளுக்கும், வடநாட்டின ருக்கும் விற்பது என்பதை யோசிக்க வந்திருக்கி றார் என்றனர். கோயம்புத்தூர் தொழில் முனைவோராகிய நாங்கள், எங்களுடைய சொந்த ஆற்றலை வைத் துக் கொண்டு, எங்களுக்கு இருக்கும் வாய்ப்பு களின் மூலமாக வியாபாரத்தை நடத்தி வருகின் றோம். இவர் சொல்லும் ஆட்டோமேசனும், ரோபோட் டிக்கும் வந்தால் 400க்கும் மேற்பட்ட சிறு தொழில் செய்யும் எங்கள் பவுண்டரி தொழில், அப்படியே மூடப்பட்டு விடும். இது, சில பெரு முதலாளிக ளுக்கே, பயன்படும். நாங்கள் முன்வைத்த 5 சதவிகித ஜிஎஸ்டி, ரா மெட்டிரியல் பேங்க், குறுந்தொழிலுக்கு என தொழில் பேட்டை போன்ற எந்த கோரிக்கையும் அவரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர், சொல்வதெல்லாம் பத்தாயிரம் மடங்கு இங்கு தொழில் விரிவடையும், எப்படி என்றால், பதில் இல்லை.  அடுத்து, கோவையில் 310 இன்ஜினியரிங் கல் லூரிகள் உள்ளது. அதில் ஆண்டுக்கு ஒரு லட்சம்  

இன்ஜினியர்கள் வருகின்றார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அளவுக்கு இங்கு திறன் இல்லை என்றார். பின்னர் பேசியதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இங்கிருக்கும் இளை ஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் எந்த வேலைக் கும் லாயக்கற்றவர்கள், எப்பொழுதும் மதுபான கடையிலேயே குடியிருப்பார்கள். இவர்களை வைத்து எந்தவிதமான கடின வேலையும் செய்ய முடியாது என மிகக் கேவலமான உரையை நிகழ்த்தினார்.   நமது குழந்தைகளை, கஷ்டப்பட்டு, தொழில் செய்து, நன்கு படிக்க வைத்து நல்ல தொழில் முனைவோராகவும், வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும், நல்ல வேலைக்கும் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை நமது இளை ஞர்களையும், மாணவர்களையும் இவ்வளவு கேவ லமாக எடை போட்டு வைத்திருக்கின்றார் என ஆத்திரம்தான் வந்தது. சிங்கப்பூர் அதிபர் லீடங்கை போல இந்தி யாவை மோடி மாற்றுவார் என ஆச்சர்யப்படுத்தி னார். அதுதான் ஒன்றும் புரியவில்லை. மோடி  ஆட்சிக்கு வரும்போது இறக்குமதி 4 லட்சம்  கோடியாக இருந்தது. தற்போது 40 லட்சம் கோடி யாக மாறி உள்ளது. அதுவும் சீனாவில் இருந்து  தான் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்கின்றார்கள். அந்த 70 சதவிகித பொருட்களில் 90 சதவீதம் பொருட்கள் குஜராத் திகள் தான் இறக்குமதி செய்கின்றார்கள். மேலும், கடந்த 50 ஆண்டுகளாக கட்டி காப்பாற்றி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் விற்று, தனியாருக்கு கொடுத்துவிட்டு, நாம் வாங் கும் மூலப் பொருட்களின் விலையை தாறுமாறாக  உயர்த்தி விட்டு, சிங்கப்பூரை போல இந்தியாவை மோடி மாற்றுவார் என சொல்வது நகைப்பைத் தான் ஏற்படுத்தியது.  பின்னர், இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் நமது கோரிக்கையை சரி யாக பிரதிபலிக்கவில்லை என வாய் கூசாமல் சொன்னார். அதுவும், எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுடன், உருவாக் கப்பட்ட கோ இந்தியா வளாகத்தில் இருந்து அது சொன்னது நகைப்புக்கு இடமானதாக இருந்தது. கோஇந்தியா மற்றும் இந்தியாவிலேயே முதன் மையான பவுண்டரி கிளஸ்டர் கோயமுத்தூரில் தான் துவங்கப்பட்டது. இந்த கிளஸ்டருக்கு தேவை யான உதவிகளை அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயனும், பி.ஆர்.நடராஜ னும் உருவாக்கித் தந்தது என்பது இங்கிருக்கும் பவுண்டரி அதிபர்கள் அனைவருக்கும் தெரியும். பாவம் வளர்ச்சி குறித்து வாயடிக்கும் மிஸ்டர் அண்ணாமலைக்கு தெரியவில்லை. லஞ்சம் ஊழலை பற்றி பேசினார். அவர் பேசும் போதே எனக்கு சிரிப்பு வந்தது. தமிழகத்துக்கு வந்த கியா மோட்டார்ஸும், டிசிஎஸ் நிறுவனமும் தங்களால் லஞ்சம் கொடுக்க முடியாது என்ற கார ணத்தினால் வேறு மாநிலத்துக்கு சென்று விட்டார் கள். அதுவும் டிசிஎஸ் நிறுவனம் தமிழக அரசுக்கு கொடுத்த லஞ்சத்தினால் அமெரிக்காவுக்கு 414  கோடி டாலர் அபராதமாக செலுத்தியது என்றெல் லாம் புதிது புதிதாக கதை விட்டார். அதுமட்டுமல்ல அண்ணாமலை ஊழலையும், லஞ்சத்தையும் பற்றி  பேசுனது அதைவிட சிறப்பாக இருந்தது.

ஏனென் றால் ஒரு லாட்டரி சீட்டு அதிபரிடமே ரூ.1300 கோடி  தேர்தல் நிதி வாங்கியவர்கள். அவருக்கு எத்தனை சலுகைகளை அளித்திருக்க வேண்டும் எண்ணிப் பார்த்தாலே தலை சுற்றுகின்றது. கோவையின் மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றிய  அரசின் அனுமதிக்காக நீண்ட காலம் காத்துக் கொண்டிருக்கின்றது. கோவை விமான நிலைய விரிவாக்கம் 10 ஆண்டுகளாய் நிதி ஒதுக்கப்படா மல் காத்துக் கொண்டிருக்கின்றது. அம்பானி குடும்ப நிகழ்ச்சிக்காக சூரத் விமான நிலையத்தை மூன்று மாதத்தில் தயார் செய்தனர். ஆனால் பத்து  வருடங்களாக நம்மை இழுத்தடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  இறுதியாக ஒன்று சொன்னார். நான் சொன் னால் இங்கே இருக்கும் முதலாளிகள் பணத்தைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் என்றார். மோடி தான் ஒரே தலைவர், நீங்கள் எனக்கு ஓட்டு போட்டா லும், போடாவிட்டாலும் அவர் தான் பிரதமர், அது வும் நிரந்தர பிரதமர் என்றார். அகங்காரம் என்பது யாதெனில்.,திறமை தனக்கு மட்டுமே இருப்ப தாய் நம்புவது..., ஆனால் உண்மையில் பாஜகவினருக்கோ, அண்ணாமலைக்கோ தொழிற்துறை குறித்து மட்டு மல்ல எந்தத்துறை குறித்தும் இவர்களுக்கு சிற்றரிவு கூட இல்லை என்பது, மொத்த பேச்சில் புலப்பட் டது. யாரோ எழுதிக்கொடுக்க, மெனக்கெட்டு மனப்பாடம் செய்து ஒப்பிக்கிற ஐபிஎஸ் நமது கோவை மாவட்டத்தின் தொழிற்துறைக்கு எந்த வகையிலும் உதவ மாட்டார் என்பதே கூட்டத்தில் இருந்து கலைந்து சென்ற மொத்த தொழில்முனை வோர்களின் உடல் மொழியாக இருந்தது.