districts

img

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கையெழுத்து இயக்கம்

நாமக்கல், பிப்.3- சாலை விபத்து ஏற்படுத்தும் ஓட் டுநருக்கு 7 வருடம் சிறை தண்டனை  என்று சட்டத்தை திருத்தி கொண்டு  வரப்பட்டுள்ள ஒன்றிய பாஜக அர சைக் கண்டித்து எலச்சிபாளையத் தில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. ஓட்டுநர்களுக்கு விபத்து மரணத் திற்கு 7 ஆண்டு சிறை தண்டனை, 7  லட்சம் ரூபாய் அபராதம் என்ற சட்ட  திருத்தத்தை கைவிட வேண்டும்.  தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டும். மோட் டார் தொழிலாளர்களை கொலை குற் றவாளியாக மாற்றும் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். மோட்டார் தொழிலை அழிவுப்பாதைக்கு தள் ளுவதை கைவிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் பிப்.6 ஆம் தேதி யன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  மேலும், ஓட்டுநர்களிடம் கையெ ழுத்து இயக்கம் நடத்தி, போக்குவ ரத்து ஆய்வாளர்களிடம் மனு  அளித்து, மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஆட்டோ நிறுத்தம் அருகே சிஐடியு நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழிலா ளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.முனியப்பன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற் றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் சு.சுரேஷ், கிளை நிர்வாகிகள் சேகர், பாபாஷா, அசோக், சுப்ரமணி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.