districts

img

சங்ககிரியில் தொடர் திருட்டு: பொதுமக்கள் அச்சம்

இளம்பிள்ளை, மார்ச் 6-  சங்ககிரியில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவம் காரண மாக அப்பகுதி பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம், காளிப் பட்டி பிரிவு ரோடு பகுதியைச் சேர்ந்த வர் முத்துகிருஷ்ணன் (41). இவர், வைகுந்தம் பகுதியில் ஜெராக்ஸ் மற் றும் மளிகை கடை நடத்தி வருகி றார். இந்நிலையில், தனது கடையை சனியன்று வழக்கம்போல் திறப்ப தற்காக வந்து பார்த்தபோது, கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப் பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது  20ஆயிரம் மதிப்புள்ள ஜெராக்ஸ் மிசின் மற்றும் கடை யில் இருந்தரூபாய் 29 ஆயி ரத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சங்ககிரி காவல் துறை யினர் அடையாளம் தெரியாத நபர் களை தேடி வருகின்றனர். இதேபோல், வைகுந்தம் காளிப் பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த ராஜா (42) என்பவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சனியன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கடை உடைக்கப்பட்டு  இருப்ப தைக் கண்டு கடையின் உரிமையாள ருக்கு தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து அங்கு வந்த கடை உரிமை யாளர் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த 15 ஆயி ரம் ரூபாய் மற்றும் எரிவாயு சிலிண் டர் ஒன்று திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து, சங்ககிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், சங்ககிரி அருகே சின்னாக்கவுண்டனூர், பைபாஸ்  கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர்  சின்னராசு (33). கூலித்தொழிலாளி யான இவர், தனது மனைவி, குழந் தைகளுடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கி கொண்டிருந் தார். இதையடுத்து சனியன்று காலை  எழுந்து பார்த்தபோது, மற் றொரு அறையின் கதவு உடைக் கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கொலுசு மற்றும். ரூ.1,500 ரொக்கப் பணம் ஆகியவை திருடுபோய் இருந்தது. இதுகுறித்து சின்னராசு சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்ககிரி பகுதியில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவம் கார ணமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.