districts

img

திருப்பூரில் செந்தொண்டர் பயிற்சி முகாம்

திருப்பூர், ஜூன் 19- திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தெற்கு மாநகரம் செந்தொண்டர் பயிற்சி  முகாம் ஞாயிறன்று பி.ஆர்.நிலையத்தில் நடைபெற்றது.  தெற்கு மாநகரம் செந்தொண்டர் பயிற்சி முகாம் ஞாயிறன்று (ஜூலை 19) பி.ஆர். நிலையத்தில் நடைபெற்றது. இம்முகா மிற்கு மாநகரக்குழு உறுப்பினர் ஜி.செந்தில் குமார் தலைமை ஏற்றார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.மூர்த்தி, தெற்கு மாநகர செயலாளர் த.ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.சுந்தரம் , தௌ.சம்சீர் அகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.உண்ணிகிருஷ்ணன் மற்றும் பா. ஞானசேகர், செல்லமுத்து, சரவணன், மதி வாணன், சஞ்சீவன், டி.மினி, சந்திரசேகர் உள்ளிட்டு 65 பேர் பங்கேற்றனர்.