கோயம்புத்தூர், செப். 2 - ஞானசம்பந்தம் என்கிற தோழர் சி. ஞானபாரதி (77) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைபாடு காரணமாக ஞாயிறன்று இரவு காலமானார்.
வழக்கறிஞர், மார்க்சிய சிந்தனை யாளர், தீக்கதிர் முன்னாள் உதவி ஆசிரி யர், எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்ட தோழர் சி. ஞானபாரதியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள் ளனர்.
கே. பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வழக்கறிஞரும், எழுத்தாளருமான தோழர் ஞானபாரதி மறைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடலூர் மாவட்டம், பெண்ணா டத்தில் பிறந்த அவர் பட்டப்படிப்பு முடித்து தீக்கதிர் மதுரைப் பதிப்பில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். பல ஆண்டுகள் தீக்கதிர் மற்றும் செம்மலரில் கட்டுரைகளை எழுதினார். 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் சமயத்தில் தீக்கதிர் அலுவல கத்தில் சில வாரங்கள் தங்கி பணி யாற்றும்போது தோழர் ஞானபாரதி யுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிட்டி யது. பெண்ணாடத்தில் இருந்த அவரது குடும்பத்துடன் நெருக்கமான உறவும் ஏற்பட்டது.
சென்னை சட்டக்கல்லூரியில் பயின்றபோது இந்திய மாணவர் சங்கத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக பணியாற்றினார். கோவையில் வழக்கறிஞர் பணியை தொடங்கிய அவர் சுமார் 50 ஆண்டு காலம் வழக்கறிஞராக பணியாற்றி உழைப்பாளி மக்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியவர்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளை ஞர்களுக்கு ஆதரவாக வாதாடி அவர் களுக்கு விடுதலையும் பெற்றுத் தந்த வர். தோழர் சி.ஞானபாரதி தீவிர வாசிப் பாளர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாள ரும் கூட. ‘மூங்கில் கழி’, ‘சந்திரமுகி’ ஆகியவை அவர் எழுதி வெளிவந்த சிறுகதை தொகுப்புகள்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்துவாடும் அவரது மனைவி திருமதி ஜி.பத் மினி, மகன் ஸ்ரீகந்தன், மகள் பிந்து மற் றும் குடும்பத்தாருக்கு எனது அனுதா பத்தையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட் டுள்ளார்.
“தோழர் சி. ஞானபாரதி, தத்து வார்த்த ஞானம் உள்ளவர். அக்காலத் தில் மாணவர்கள் மத்தியில் நிலவிய இரண்டு திரிபுகளையும் எதிர்த்து உறு தியாக போராடியவர்” என்று ஜி. ராம கிருஷ்ணன் தனது இரங்கல் செய்தி யில் தெரிவித்துள்ளார். மேலும், “கோவையில் வழக்கறிஞர் பணியாற்றி யதோடு, எழுத்தாளராகவும், கடைசி வரை கட்சி ஆதரவாளராகவும் விளங்கிய என்னுடைய உற்ற நண்பர், தோழர் சி. ஞானபாரதியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார்.
“கல்லூரி மாணவராயிருந்த ஞான பாரதி, தொழிற்சங்கத் தலைவர் வி.பி. சிந்தன் அவர்களால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். கல் லூரி படிப்புக்குப் பிறகு, செம்மலர் இத ழின் முதல் ஆசிரியர் குழுவில் இணை ந்து பணியாற்றியவர். அப்போதி ருந்தே கதைகளை எழுத ஆரம்பித் தார். செம்மலரில் எழுதிய மலையேற் றம், ஒரு சொட்டு கண்ணீர், சந்திரமுகி ஆகிய கதைகளும், மூங்கில்கழி, சந்திர முகி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் இலக்கிய உலகில் அவருக்கான இடத்தை உறுதி செய்தது. அவரது தொகுப்புகள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் தொடக்ககாலத் தலை வர்களில் ஒருவரான ஞானபாரதி, முதல் மாநிலக்குழு உறுப்பினராகவும் செய லாற்றியவர்” என்று தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.
தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் என். பாண்டி, ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோவை வடவள்ளி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் சி. ஞானபாரதி உடலுக்கு சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் யு.கே.சிவஞானம், அஜய் குமார் கே.எஸ். கனகராஜ், தமுஎகச மாவட்டத் தலைவர் தி. மணி, மாவட்ட செயலாளர் அ. கரீம், வழக்கறிஞர்கள் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் மு. ஆனந்தன், மாநில பொருளாளர் மாசேதுங், மாவட்டத் தலைவர் ராமர், மாவட்டச் செயலாளர் ஜோதி குமார், தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், எண்ம பதிப்பின் பொறுப்பாசிரியர் எம். கண்ணன், செய்தி ஆசிரியர் அ.ர. பாபு, விநியோக மேலாளர் நெல்சன் பாபு மற்றும் விளம்பர பிரிவு நிருபன் சக்கர வர்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி னர். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, திங்களன்று தோழர் சி. ஞான பாரதியின் உடல் மருத்துவ மாணவர் களின் பயிற்சிக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தானம் வழங்கப் பட்டது.