பொள்ளாச்சி, ஜன.31- சட்டவிரோமாக கடத்தி வரப்பட்டு, பறிமுதல் செய் யப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான அண்டை மாநில மது பாட்டில்களை மதுவிலக்கு காவல் துறையினர் பொள் ளாச்சியில் உள்ள தனியார் காட்டில் வைத்து அழித்த னர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மதுவிலக்கு அமலாக்கதுறை காவல் துறையினர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க வாகன சோதனை மற்றும் பல் வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் வால் பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.14 லட்சம் மதிப்பிலான 10 ஆயிரத்து 446 அண்டை மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மதுபாட் டில்களை பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள தனி யார் இடத்தில், மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வா ளர் அமுதா முன்னிலையில் அழிக்கப்பட்டது. இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் உதவி ஆய்வாளர் ஜான்ஜுனியன் சிங் கூறுகையில், கோவை மாவட்டத்தில் மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக - கேரளா எல்லையில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட் டுள்ளது, என்றார்.