districts

img

குட்டி யானையை மீட்டு பராமரிக்கும் வனத்துறை தாய் யானையை தேடும் பணி தீவிரம்

மேட்டுப்பாளையம், மே 27- சிறுமுகை வனச்சரக பகுதியில் தாயை பிரிந்த பத்து மாத குட்டி யானையை மீட்ட வனத்துறையினர். அதனை பராமரித்து வருவதோடு தாய்  யானையை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக பகுதியில் உள்ள குமரன் சாலை என்னும் வனப்பகுதியில் திங்க ளன்று ஒரு குட்டி யானை தன்னந்த னியே சுற்றி வருவதையும் தனது தாய்  யானையை தேடி அங்கும் இங்கும் ஓடி யபடி இருப்பதையும் அப்பகுதியில் இருந்த மீனவர்கள் பார்த்துள்ளனர். இத னையடுத்து சிறுமுகை வனத்துறையி னருக்கு தகவல் கொடுத்ததோடு குட்டி  யானையை குமரன் சாலை வனப்பகுதி யில் உள்ள வனத்துறை முகாமிற்கு அருகே திங்களன்று மாலை மெல்ல மெல்ல அழைத்து வந்துள்ளனர். இத னையடுத்து குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் யானை குட்டி தீவ னங்கள் கொடுத்து பராமரிக்க துவங்கி னர். ஆனாலும் யானை சற்று சோர்வு டன் இருப்பதை கண்ட வனத்துறையி னர், வனத்துறை மருத்துவர் சுதாகரை  அழைத்து வந்து அதன் உடல் நிலையை  பரிசோதித்தனர். குட்டி யானையின் உடல் நிலை சீராக இருப்பதும் பிறந்து பத்து மாதங்கள் வரை ஆகியிருக்கும் என்றும் எந்த காரணத்தினாலோ தாய் யானையை பிரிந்துள்ளது என்பது தெரிய வந்தது. பின்னர் யானையின் சோர்வை போக்க இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதோடு பழங்கள் மற்றும் சத்தான தீவனங்களை குட்டி யானைக்கு வழங்கியதையடுத்து மீண்டும் சுறுசுறுப்பாக யானை சுற்றி வர துவங்கியது. இதனையடுத்து குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்க வேண்டி தாய் யானையை வனத்துறையினர் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். குட்டி யானை கண்டறியப்பட்ட இடம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி  உள்ளதால் அங்குள்ள வனத்துறையின ருக்கும் தகவல் தெரிவித்து தாய் யானையை தேடும் பணியை தொடர் கின்றனர். குட்டி யானையின் தாய் யானை  உள்ள யானை கூட்டம் கண்டறியப்பட் டால் உடனடியாக குட்டியை அதனுடன்  சேர்க்க ஒரு வனக்குழுவும் முகாம் பகுதி யில் உள்ள குட்டியை பராமரித்து பாது காக்க ஒரு வனக்குழுவும் பணியாற்றி வருகின்றனர்.