districts

img

அவசரகதியில் துவங்கப்பட்ட சேலம் அரசு பொருட்காட்சி

சேலம், ஆக.10- முறையான ஏற்பாடுகள் மற்றும் கட்டுமானப் பணிகள் முடியாமல் அவ சரகதியில் சேலம் அரசு பொருட்காட்சி  துவங்கப்பட்டது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதா னத்தில், வெள்ளியன்று அரசு பொருட் காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 45  நாட்கள் தொடர்ந்து நடக்கும் இந்த  பொருட்காட்சி எந்த அடிப்படை வசதி களும் இன்றி துவங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் கூறு கையில், பொருட்காட்சி வளாகம் முழு வதும், குண்டும், குழியுமான நடை பாதை, அமைச்சர் வருகைக்காக புதி தாக போடப்பட்ட தரமற்ற சாலை, நக ராட்சி நிர்வாகத்துறை அரங்கம் மட்டுமே  முழுமையாக கட்டப்பட்டுள்ளது. மற்ற அரங்கங்கள் அமைக்கும் பணி முழுமை யடையாமல், வெறும் கூடு போன்று காட்சியளிக்கின்றன. பொருட்காட்சி நடக்கும் மைதானம் மழைநீர் தேங்கி காணப்படுகிறது, பொருட்காட்சிக்கு வரும் பொதுமக்கள் அவசர சிகிச்சை பெற ஏற்படுத்தப்பட்ட அரங்கில் எந்த மருத்துவ வசதிகளும் செய்யப்பட வில்லை. குழந்தைகள் விளையாட்டு திடல், கழிவறை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்குகள் என எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி னர். நீண்ட வருடங்களுக்கு பிறகு நடை பெறும் பொருட்காட்சி, முன்னேற் பாடு ஏதும் இல்லாமல் அவசர கதியில் சேலம் பொருட்காட்சி அமைக்கப்பட்டி ருப்பது பொதுமக்களிடையே அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.