districts

img

காலமானார்

சேலம், ஏப்.19- மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் அஸ்தம்பட்டி ஏ  கிளை செயலாளர் எம்.ரவிச் சந்திரன் செவ்வாயன்று காலை காலமானார். அவருக்கு வயது 55. சேலத்தில் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட நிர்வாகியாகவும், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநகர நிர்வாகி யாகவும், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அஸ்தம்பட்டி ஏ கிளை செயலாளராகவும் பணியாற்றி வந்தார் தோழர் எம்.ரவிச்சந்திரன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீக்கதிர் விநியோகஸ்தராகவும் பணியாற்றியவர். கடந்த சில  மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாயன்று காலை  பாரதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவ ருக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ள னர். இவரின் மறைவை அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன், சேலம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவின்குமார், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனக ராஜ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், வெகுஜன அரங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.