சேலம், ஆக.10- மாநகராட்சியுடன் கிராம ஊராட் சிகளை இணைக்கும் முடிவுகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந் தாண்டு செப்டம்பர் முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற னர். ஆனால், எந்த கோரிக்கைளையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத் தியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன்படி, ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத் துப் பணியிடங்களையும் நிரப்ப வேண் டும். மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு திட்ட கணினி உதவியாளர் மற்றும் கழிவறை கட்டுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் அனைவரை யும் பணிவரன் முறைப்படுத்த வேண் டும். கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங் களுக்கும் உரிய பணியிடங்களை ஏற் படுத்த வேண்டும் கிராம ஊராட்சி களை பேரூராட்சி மற்றும் நகராட்சிக ளாக தரம் உயர்த்தும் நடவடிக்கை களை ரத்து செய்து மாநகராட்சி, நக ராட்சிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கைகளை முற் றிலுமாக கைவிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத் தில் வெள்ளியன்று மாலை போராட் டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் ஜான் ஆன்ஸ்டீன் தலைமை வகித்தார். இதில் சங்கத் தின் மாநில துணைத்தலைவர் ந.திரு வரங்கன், மாவட்ட துணைத் தலைவர் விஜயகுமார் அரசு ஊழியர் சங்க வட்டக்கிளைத் தலைவர் முருகப் பெருமாள், செயலாளர் ஸ்ரீபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப் போது, ஆக.22, 23 ஆகிய தேதிக ளில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக சங்கத்தின் நிர்வாகிகள் தெரி வித்தனர்.