6 மாதத்திற்கு முன்பு போடப்பட்ட சாலை சமீபத்தில் பெய்த மழையால் சேதம்
திருப்பூர், டிச.15- பிரிட்ஜ்வே காலனியில் 6 மாதத்திற்கு முன்பு போடப்பட்ட சாலை சமீபத்தில் பெய்த மழையில் குண்டும் குழியுமாக மாறி விட்டது. தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது சட் டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 31 ஆவது வார்டுக்கு உட்பட்ட பிரிட்ஜ்வே காலனி பகுதி யில் 1200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி யில் குடிநீர் குழாய் உடைந்து 15 நாட்களுக்கு மேலாகிறது. இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளதால் தண்ணீர் வீணாகி றது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். பிரிட்ஜ்வே காலனி முதல் கொங்கு முக்கிய சாலை வரை 6 மாதத்திற்கு முன்பு போடப்பட்ட சாலை சமீபத்தில் பெய்த மழையில் குண் டும் குழியுமாக மாறிவிட்டது. இப்படி தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும். 20 நாட் களுக்கு மேலாக இப்பகுதியில் எரியாமல் உள்ள மின் விளக்கு கள் சரி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர்.
போக்குவரத்து அலுவலர் மீது தாக்குதல்: இருவருக்கு குண்டாஸ்
திருப்பூர், டிச.15- திருப்பூர் 15 வேலம்பா ளையத்தில் உள்ள வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு மினி பேருந்து உரிமையாளரான பெரிச்சிபாளையத்தைச் சேர்ந்த ஆர்.ரவிகுமாா் (48), அவரது மேலாளரான கோவை கருமத்தம்பட்டி யைச் சேர்ந்த எம்.சுரேந்தர் (24) ஆகியோர் கடந்த நவம் பர் 20 ஆம் தேதி போக்குவ ரத்து அலுவலரான ஜெயதே வராஜை தகாத வார்த்தைக ளால் திட்டித் தாக்கியுள்ள னர். இது தொடர்பாக 15 வேலம்பாளையம் காவல் துறையினர் இருவரையும் கைது சிறையில் அடைத்த னர். இந்நிலையில், இருவ ரும் பொது அமைதிக்கு குந்த கம் விளைவிக்கும் வகை யில் செயல்பட்டதால், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சிறையில் உள்ள அவர்களிடம் போலீஸார் வியாழக்கிழமை வழங்கி னர்.