districts

கூடலூர் – உதகை சாலையில் போக்குவரத்து மீண்டும் துவக்கம்

உதகை, ஆக.13- பாலத்தின் அடிப்பாகம் இடிந்து விழுந்ததால் கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து அடியோடு துண்டிக்கப்பட் டது. இதையடுத்து ஞாயிறன்று மீண் டும் போக்குவரத்து சேவை துவங்கி யது. நீலகிரி மாவட்டம், கூடலூரிலி ருந்து உதகைக்கு தேசிய நெடுஞ் சாலை செல்கிறது. இவ்வழியாக கர் நாடகா, கேரளம் உட்பட வெளி மாநி லங்களில் இருந்து ஏராளமான வாக னங்கள் உதகைக்கு இயக்கப்படு கிறது. இந்நிலையில், கூடலூர் - உதகை சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் தேசிய நெடுங் சாலைத்துறையினர் ஈடுபட்டு வரு கின்றனர். தொடர்ந்து மேல் கூடலூர் புனித மேரிஸ் ஆலயம் எதிரே உள்ள தரைப்பாலத்தையொட்டி சாலை விரி வாக்க பணிக்காக கடந்த சில வாரங்க ளாக பொக்லைன் எந்திரம் மூலம் மண் தோண்டும் பணி நடந்து வருகி றது. இந்நிலையில், சனியன்று மாலை தரைப்பால அடிப்பாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து வாகனங்கள் சென்ற போது அடிப்பாகம் மேலும் சேதம டைந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள், போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கூடலூர் கோட்டாட்சியர் முகமது குத ரதுல்லா, வட்டாட்சியர் ராஜேஸ்வரி,  காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்த னர். அப்போது பாலம் இடிந்து விழும் நிலையில் இருப்பதை உறுதி செய்த னர். இதைத்தொடர்ந்து தேசிய நெடுங் சாலையில் வாகன போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப் பதை அறிந்து, போக்குவரத்தை முழுமையாக நிறுத்த உத்தரவிட் டார். இதனால் தேசிய நெடுஞ்சாலை யின் இருபுறமும் தமிழக - கர்நாடகா பேருந்துகள் உட்பட ஏராளமான வாக னங்கள் அணிவகுத்து நின்றதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடுவழியில் அவதி அடைந்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் முகமது குதரதுல்லா தலைமையி லான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன்பின் பாலத்தின் மேற்புறம் மாற்று சாலை அமைத்து  வாகன போக்குவரத்தை தொடங்க  முடிவு செய்தனர்.

 தொடர்ந்து அப்பகு தியில் இருந்த மின்கம்பங்கள் அகற் றப்பட்டது. இரவு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மாற்று  சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து முகமது குதரதுல்லா கூறுகையில், இடிந்த பாலத்தின் அருகே மாற்று சாலை அமைக்கும் வரை கூடலூரிலிருந்து மசினகுடி, கல்லட்டி, தலைகுந்தா மலைப்பாதை வழியாக உதகைக்கு உள்ளூர் வாகனங்களை மட்டும் காலை 6 மணி முதல் இயக்க அனு மதி அளிக்கப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக, ராகுல்காந்தி எம்.பி. சனி யன்று மாலை இந்த பாலம் வழியாக வயநாடு சென்றது குறிப்பிடத்தத் கது. இதைத்தொடர்ந்து சனியன்று இரவோடு இரவாக தேசிய நெடுங் சாலைத்துறை ஊழியர்கள் தற்கா லிக பாலம் அமைத்து, ஞாயிறன்று  காலை முதல் போக்குவரத்து துவங் கியது. இதனைத்தொடர்ந்து சனி யன்று இரவு முதல் நிறுத்தப்பட்டி ருந்த மூன்று மாநில போக்குவரத்து  சேவை மீண்டும் தொடங்கியது. தடை யில்லா போக்குவரத்து ஏற்படுத்தும் வகையில் அனைத்து வாகனங்க ளும் சனியன்று இரவு முதல் கல்லட்டி மலைப்பாதை வழியாக அனுமதிக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.