சேலம், மே 27 – ஊதிய ஒப்பந்தத்தில் நிலு வையிலுள்ள அனைத்துப் பிரச் சினைகளுக்கும் தீர்வு காண வலி யுறுத்தி, சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் செவ்வா யன்று மாநிலம் தழுவிய ஆர்ப் ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கழகங்களின் வரவுக்கும், செல வுக்குமான வித்தியாச தொகையை ஈடுசெய்ய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசிமுடிக்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலா ளர்களின் பணப்பலன்கள் மற்றும் பஞ்சப்படி உயர்வை முழுமையாக உடனே வழங்க வேண்டும். அனைத்து பிரிவுகளிலும் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்த வேண்டும். காண்ட்ராக்ட் முறை, தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வேண் டும். பதிவு செய்து காத்திருக்கும் அனைவருக்கும் வாரிசு வேலை உடனே வழங்க வேண்டும். பராம ரிப்புக்கு தேவையான உதிரி பாகங் களை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தி சேலம் அஸ்தம்பட்டி பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சேலம் மாநகரில் உள்ள அனைத்துப் போக்குவரத்துப் பணி மனைகள் முன்பும் கண்டன ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. சேலம் மாநகர அரசு விரைவுப் போக்கு வரத்துப் பணிமனை, மெய்யனூர், பள்ளப்பட்டி உள்ளிட்ட இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐ டியு சாலைப் போக்குவரத்துத் தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், போக்குவரத்துத் தொழிற்சங்க மண்டல பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் செம் பன், பொருளாளர் சேகர், துணைப் பொதுச் செயலாளர் செந்தில்கு மார், அரசு விரைவுப் போக்குவ ரத்துத் தொழிற்சங்க மாநிலத் துணை பொதுச் செயலாளர் முரு கேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். சிஐடியு ஏஐடியுசி ஆர்ப்பாட்டம் தருமபுரி போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு சிஐடியு-ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு போக்கு வரத்து கழக மாவட்ட தலை வர் எஸ். சண்முகம் தலைமை வகித் தார். இதில், சிஐடியு மாநில செயலா ளர் சி. நாகராசன், ஏஐடியுசி மாவட் டச் செயலாளர் கே.மணி, சிஐடியு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி. ரகுபதி பொருளாளர் என்.மயில்சாமி, ஏஐ டியுசி போக்குவரத்து கழக மாவட் டச் செயலாளர் நாகராஜன் உள் ளிட்டோர் உரையாற்றினர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.