உடுமலை, ஆக.2- அமராவதி அணையிலிருந்து வெளி யேற்றப்படும் உபரிநீரை, அருகே உள்ள குளம், குட்டைகளுக்கு விட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருவதுடன், ஆற்றின் வழியோர கிரா மங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள் ளது. இந்த அணையில் இருந்து கடந்த மாதம் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களில் உள்ள பயிர்களை காப்பதற்காகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கா கவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நி லையில், அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந் துள்ளதால், அணையின் நீர்மட்டம் வேக மாக உயர்ந்து முழு கொள்ளளவை கடந்த ஜூன் மாதம் எட்டியது. கடந்த இரண்டு வாரகாலமாக கேரளாவி லுள்ள மூணாறு, தலையாறு, மறையூர் பகுதியில் கனமழை பெய்து, அணை யின் பிரதான நீர்வரத்து ஆறான பாம் பாற்றின் மூலம் தொடர்ந்து அதிகப்படி யான நீர்வரத்து உள்ளது. அதன்படி, வெள்ளியன்று காலை நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2011 கனஅடியாகவும், அணையின் நீர்ம டம் 90 அடியில் 88.36 அடியாகவும் உள் ளது. இதனால் அணையின் பாதுகாப் புக்கருதி, 1,938 கனஅடி நீர், புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாய நிலங்க ளுக்கு பயன்படும் வகையில் திறக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், அமராவதி அணை யில் இருந்து கடந்த இரண்டு வாரமாக வெளியேற்றப்பட்ட உபரிநீரை, முறை யாக இப்பகுதியில் இருக்கும் குளம், குட்டைகளுக்கு விடப்பட்டிருந்தால், அடுத்த ஒரு ஆண்டுகளுக்கு மேல் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து இப்பகுதி செழிப்பாக இருந்திருக்கும். எனவே, வரும் காலத்தில் உபரிநீரை முறையாக பயன்படுத்த பொதுப்பணித்துறை அதி காரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், என சமூக ஆர்வலர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.