உடுமலை, மார்ச் 19- உடுமலை மற்றும் மடத்துக்குளம் கிராமங்களில் உள்ள குளங்களுக்கு திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைக ளில் இருந்து தண்ணீர் திறத்து விட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள் ளார்கள். உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய தாலுகா பகுதிகள் அதிக கிராமங் கள் உள்ளது. இப்பகுதிகளில், முக்கிய தொழிலாக விவசாயம் மற்றும் கால் நடை வளர்ப்பு உள்ளது. இது இம்மக்க ளின் வாழ்வாதாரமாக உள்ளது. மேலும், வரும் மாதங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற அறி விப்பால், தண்ணீரின் தேவை அதிக மாக இருக்கும். எனவே கிராமங்களில் உள்ள அனைத்து குளம் மற்றும் குட்டை களுக்கும் அணைகளில் இருந்து தண் ணீர் திறக்க வேண்டும். குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் இருந்தால் சுற்று வட்டார பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் ஆழ்குழாய்கள் மூலம் மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், கால்நடைகளுக்கு தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். எனவே அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்கள். உடுமலை தாலுகா ஆலாம்பாளையம் கிராமத்தில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் பூசாரி நாயக்கர் குளத்திற்கு, திருமூர்த்தி அணையில் இருந்துமுறையாக தர வேண்டிய தண்ணீரே இன்னும் திறந்து விடாமல் உள்ளதால் அப்பகுதி விவசா யிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள் ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.