உடுமலை, ஏப்.28- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மடத்துக்குளம் ஒன்றிய 5 ஆவது மாநாடு ஒன்றி யத் தலைவர் கன்னித்தாய் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் அரசு ஊழியர் சங்கத்தின் மதன்குமார், சிவக் குமார், சௌந்திரராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மடத்துக்குளம் சிஜடியு சங்கத்தின் தலைவர்கள் ஆர்.வி.வடி வேல், பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இம்மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர்களாக 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணியா ளர்களுக்கு பணிக்கொடையாக பத்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண் டும். உதவியாளர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் மடத்துக்குளம் ஒன்றிய தலைவராக விமலா, செயலாளராக தெய்வலட்சுமி, பொரு ளாளராக சத்யபாமா மற்றும் துணைத்தலைவர்கள், இணைச் செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். முடிவில், மாவட்ட செயலாளர் எல்லம்மாள் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.