திருப்பூர், பிப்.9- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருப்பூர் கிளை சார்பில் செவ்வாயன்று மாலை திருப்பூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஊதிய உயர்வு கோரிக்கை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் து.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், கிளைச் செயலாளர் ஆர்.நாகரா ஜன், பொருளாளர் மோகன்தாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.