சேலம், மே 18- கூடுதல் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியான வயதை 80 லிருந்து 70 ஆக குறைக்க வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் ஓய்வூதியர் கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். 3 சதம் அகவிலைப்படியை 2022 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவை திரும்பப்பெற அளிக்கப்பட்ட மனுக்களின் மீது நடவ டிக்கை எடுத்து உரிய தொகையை அரசு உடனடியாக வழங்க வேண் டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7,750 வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய் வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங் கம் சார்பில் சேலம் கோட்டை மைதா னத்தில் தர்ணா போராட்டம் நடைபெற் றது. மாவட்ட தலைவர் ஏ. நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில துணைத் தலை வர் த.குப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.அருள்மொழி, மாவட்ட துணை தலைவர் எம்.ஜி.ராமச் சந்திரன், மாவட்ட செயலாளர் சுப்ர மணியம், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் என். திருவேரங்கன், ஓய் வூதியர் கூட்டமைப்பின் மாவட்ட தலை வர் சேவை.அங்கப்பன், மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர் களின் கூட்டமைப்பு கன்வீனர் கே.ஆர். கணேசன், மாநில பட்டு வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தின் செயலாளர் கோவிந்தசாமி உள்ளிட்டு ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.