districts

img

நாமக்கல்லில் ரேக்ளா ரேஸ் பந்தயம்

நாமக்கல், டிச.14- திருச்செங்கோடு தனி யார் கல்லூரியில் ரேக்ளா  ரேஸ் பந்தயம் நடைபெற  உள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கேஎஸ்ஆர்  கல்வி நிறுவனம் மற்றும்  தமிழ்நாடு ரேக்ளா ரேஸ் சங்கம் ஆகி யவை இணைந்து ரேக்ளா ரேஸ் போட்டி  நடத்துகிறது. அதிவேக 200 மீட்டர், 300  மீட்டர் என இரு பிரிவாக ரேக்ளா ரேஸ்  போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கேஎஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் வரும் 16-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், இதற்காக அமைக்கப்பட்டு வரும் பந்தய  சாலையை தமிழ்நாடு ரேக்ளா ரேஸ் சங்க நிர்வாகிகள் பார்வையிட்டனர்.  இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த  தமிழ்நாடு ரேக்ளா ரேஸ் சங்க துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் கூறுகையில், காங்கேயம் காளைகளை அழிவிலிருந்து காப்பாற்றவும், தமிழர்களின் பாரம்பரி யத்தை இன விருத்தி செய்யவும் ரேக்ளா ரேஸ் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இது வரை திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிக ளில் நடந்து வந்த ரேக்ளா ரேஸ், முதன்முறை யாக நாமக்கல் மாவட்டத்தில் நடத்தப்படு கிறது. இந்த ரேக்ளா ரேஸில் இரண்டு பிரிவுக ளாக பந்தயம் நடத்தப்பட உள்ளது. இந்த  பந்தயத்தில் 400 முதல் 700 வரை காளைகள்  கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்ப டுகிறது. அரசின் அடிப்படை சட்டங்கள் அனைத்தும் இந்த ரேக்ளா ரேஸில் பின்பற்றப் படும். இந்த ரேக்ளா பந்தயத்தில் தமிழ கத்தின் ஏழு மாவட்டங்கள், கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மற்றும் கர்நாடகா வின் மாண்டியா மாவட்டம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து காளைகள் கலந்து கொள்ள  உள்ளது. சுமார் 15 ஆயிரம் பேர் பார்வையா ளர்களாக கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கிறோம் என தெரிவித்தார்.