ஈரோடு, ஏப்.28- மறைந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்திக்கு, பாரத கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் தியாகத் புகழஞ்சலி செலுத் தினார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கெயில் குழாய் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், ஈரோடு மாவட் டத்தில் உள்ள அவல்பூந்துறையில் உள்ள பிரணாவ் திருமண மண்டபத் தில், மறைந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்திக்கு புக ழஞ்சலி செலுத்தும் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில், பாரத கிஷான் யூனியன் தலைவர்கள் ராகேஷ் தியாகத் (பஞ்சாப்), பசவராஜ் (கர்நாடகா), பி.டி.ஜான் (கேரளா) ஆகி யோர் பங்கேற்று, அ.கணேசமூர்த் திக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நி கழ்ச்சியில் முத்து விசுவநாதன், ஈசன், அரச்சலூர் செல்வம், ராமசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பெ. மு.குழந்தைவேலு, சுபி தளபதி, கெயில் எரிக்காற்று குழாய் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மு. கோபால், மதிமுக பொதுக்குழு உறுப் பினர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி நினைவாக ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை அருகே குமாரவலசிலுள்ள அன்னாரது இல் லத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.