கோவை, ஜூன் 11– ரயில் பயணிகள் தேவை, குறைகளை காதில் கூட கேட்காத ரயில்வே நிர்வாகம் முதலாளிகளை அமரவைத்து ஆலோ சனை நடத்துவதா? என முற்போக்கு அமைப்புகள் போராட்ட அறிவிப்பை செய்த தால் ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சியடைந் தனர். இதனையடுத்து ரயில் பயணிகளின் தேவை குறித்த கோரிக்கை மனுக்களை போராட்ட அறிவிப்பை செய்த முற்போக்கு அமைப்புகளின் தலைவர்களை வரவ ழைத்து பெற்றுக்கொண்ட சம்பவம் கோவை யில் நடைபெற்றது. கோவை சேம்பர் ஆப் காமர்ஸ் அரங் கில், வெள்ளியன்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் தலைமையில் ரயில்வே கோரிக் கைகள் குறித்து தொழில்முனைவோர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடை பெறும் எனவும், இதில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாசன், சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக வும் அறிவிப்பு வெளியானது. ரயில் பயணி களுக்கான குறைகள், தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் ரயில்வே போராட்டக்குழு முன்வைத்துள்ளது. தொடர்ந்து இயக்கங்களையும் நடத்தி வரு கிறது. ஆனால், இதுகுறித்து எப்போதும் ரயில்வே நிர்வாகம் காதில் போட்டுக்கொள் வதே இல்லை. ரயில் பயணிகளின் கருத்தை கேட்காமல் முதலாளிகள் ஏற்பாடு செய் கிற கூட்டத்தில் பங்கேற்பது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் ரயில்வே போராட்டக் குழுவினர் அதிருப்தி தெரிவித்தனர். ரயில் பயணிகளின் குறைகளை கேட்கா மல் முதலாளிகளின் கருத்தை மட்டும் ரயில்வே நிர்வாகம் கேட்குமா? என ரயில்வே அதிகாரிகள் பங்கேற்கும் இடத்தில் கருப் புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என தபெதிக, விசிக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் ரயில்வே அதிகா ரிகள் அதிர்ச்சியடைந்தனர். ]
இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் அமைப்புகளின் கோரிக்கை மனுக்களை யும் இந்த கூட்டத்தில் பெறுகிறோம் என அறிவிப்பு செய்ய வேண்டிய நிலை ரயில்வே நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. இதனைய டுத்து போராட்டத்தை கைவிட்ட முற் போக்கு அமைப்பின் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. அதில், கோவை - பொள்ளாச்சி அகல ரயில் பாதையை முழு மையாக பயன்படுத்தப்பட வேண்டும். கோவையில் இருந்து பொள்ளாச்சி வழி யாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்க ளுக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல் வேலி செல்லும் சிறப்பு ரயில் நிரந்தரமாக்க வேண்டும். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும். வட கோவை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். வட கோவை பகுதியில் உள்ள எப்சிஐ குடோனை இருகூருக்கு மாற்றம் செய்ய வேண்டும். சென்னையில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் இருகூர், போத்தனூர் வழியாக இயக்காமல் கோவை ரயில் நிலையம் வந்து செல்லும் வகையில் இயக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, இந்த மனுவை தபெதிக பொதுச்செயளாளர் கு.இராமகிருட்டிணன், மார்க்சிஸ்ட் கட்சியின் ரயில்வே ஆலோச னைக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்புச் செயலாளர் சுசி கலையரசன், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயளாளர் ரவிக்குமார், திராவிடர் விடுதலைக் கழக நேருதாஸ் உள்ளிட்டோர் அளித்தனர். இத னைத்தொடர்ந்து தொழில் முனைவோர்க ளுடன் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.