தருமபுரி, ஜன.31- கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் “வாசனைப்பூக்கள்” என்ற தலைப் பின் கீழ் எழுதிய புத்தகம் வெளியிடப் பட்டது. தருமபுரி மாவட்டம், கிருஷ்ணா புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில மாதங்களாக “சிறகை விரிப்போம்” என்ற பெயரில் மாண வர் கையெழுத்து இதழ் நடத்தப்பட்டு வருகிறது. அந்த இதழ்களில் வெளி யான இப்பள்ளியின் மாணவர்களும், ஆசிரியர்களும் படைத்தளித்த படைப் புகளை தொகுத்து “வாசனைப்பூக் கள்” என்ற பெயரில் புத்தகமாக உரு வாக்கியுள்ளனர். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா புதனன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி யின் தலைமையாசிரியர் சோ.ஞான சிகாமணி புத்தகத்தின் முதல் பிர தியை வெளியிட்டு பேசுகையில், பல வகையிலும் முன்மாதிரியாக செயல் பட்டு வரும் நமது பள்ளியில் இந்த “வாசனைப்பூக்கள்” புத்தக வெளி யீடானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. நம் மாணவர் கள் படிப்பில் ஆர்வம் காட்டி படிப் பாளிகளாக இருக்கும் அதே நேரம், இதுபோன்ற படைப்பு செயல்பாடு களிலும் பங்குபெற்று படைப்பாளி களாகவும் திகழ வேண்டும். நிறைய நல்ல நல்ல புத்தகங்களை ஆர்வத் தோடு வாசிக்க வேண்டும். இந்த நூல் உருவாக்கத்திற்கு பெரும்பங்காற் றிய பயிற்சி ஆசிரியர்களுக்கு வாழ்த் துக்கள், என்றார். பயிற்சி ஆசிரியர் பெ.கௌதம் அனைவரையும் வரவேற்றார். உதவித் தலைமை ஆசிரியர்கள் மா.மணி, வ.ராஜாங்கம், பட்டதாரி ஆசிரியர் க. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் வி. பூர்ணிமா நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார். பட்டதாரி ஆசிரியர்கள் ப. நவ்ஷாத் பேகம், ப.கௌரவன், சா. கனகராஜி, முதுகலை ஆசிரியர் ச.செலினா மேரி மற்றும் பயிற்சி ஆசி ரியர் அ.சந்தோஷ் குமார் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். பயிற்சி ஆசி ரியர் ச.கௌதம் நன்றி கூறினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.