districts

img

கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கருவலூரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, டிச.5-  கருவலூர் கிராம நிர்வாக அலுவலர் முறையாக அலுவலகத்திற்கு வருவ தில்லை எனக் கூறி, அப்ப குதி மக்கள் செவ்வாய்க்கி ழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டோர் கூறிய தாவது, கிராம நிர்வாக அலு வலர் சசிக்குமார் என்பவர் சரியாக அலுவ லகத்திற்கு வருவதில்லை. மேலும் வந்தா லும் மது போதையில் வருகிறார். எந்த வேலை யைச் செய்தாலும் ரூ. 500க்கு குறைவில் லாமல் லஞ்சம் கேட்கிறார். அலுவலக த்திற்கு வரும் பொதுமக்களை மரியாதைக் குறைவாக பேசுகிறார். இது குறித்து கோட் டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரி டம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே உடன டியாக கிராம நிர்வாக அலுவலரை இட மாற்றம் செய்ய வேண்டும் என்றனர். கருவலூர் கிராம நிர்வாக அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், முன்னாள்  ஊராட்சித் தலைவர் அவிநாசியப்பன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பி னர் சிவக்குமார், வரதராஜன், சுரேஷ், சற்கு ணம், காத்தவராயன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.