பொள்ளாச்சி,மே 22- பொள்ளாச்சி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்தை இணைக்கின்ற சுரங் கப் பாதை தற்போது பராமரிப்பின்றி அசுத்த மான நிலையில் காணப்படுகிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். பொள்ளாச்சி மத்திய பழைய பேருந்து நிலையத்தில் இடவசதி பற்றாக்குறையி னால் 20 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை யடுத்து அதிகளவு போக்குவரத்து நெரிசல் காரணமாக பொள்ளாச்சி நகராட்சி மற்றும் வருவாய் துறையினர் சார்பில் பொள்ளாச்சி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்தை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை கட் டும் பணிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. இதன்பின்னர் 2013 ஆம் ஆண்டிலேயே பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த காரணத்தினாலும், பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் திறம்பட செயல்படாமல் இருந்த தாலும், பொள்ளாச்சி பேருந்து நிலையங் களின் இணைப்பு சுரங்கப்பாதை மேற்கூரை மிக மோசமாகவும், சிதலமடைந்தும் காணப் படுகிறது. தற்போது கோடை மழைக்காலம் துவங்கியுள்ளதால் சுரங்கப்பாதையினுள் தண்ணீர் புகும் சூழலிற்கு மாறியுள்ளது. இதனால், இதனை அன்றாடம் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது மீண்டும் பயன்ப டுத்த முடியாத நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, இரவு நேர விளக்கு கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத் தப்படாததால் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. எனவே, உடனடியாக பொள் ளாச்சி பேருந்து நிலையத்தில் சுரங்கப் பாதை சீரமைத்து பொதுமக்களின் நலனை பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.