districts

img

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரி, ஆக.3- ஒகேனக்கலில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.8.13  லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு வழங்கி னார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக் கல்லில் ஆடிப்பெருக்கு (சனியன்று) விழாவில், பல்துறை பணி விளக்க கண்காட்சி அரங்குகளை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திறந்து வைத்து பார்வையிட்டார். இவ்விழாவில் மொத்தம் 401 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 13 லட்சத்து 52 ஆயிரத்து 208 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச் சர் வழங்கினார். முன்னதாக, இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தி தலைமை வகித்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஷ்வரன், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன் னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, இன்பசேகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்கு மார், கோட்டாட்சியர் காயத்திரி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.