districts

வத்தல்மலைக்கு நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துக

தருமபுரி, செப்.28- வத்தல்மலை பகுதியில் நிரந்தர மாக ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தித் தர வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டத்திலுள்ள வத் தல்மலை கடல் மட்டத்தில் இருந்து  3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள் ளது. தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த மலை கிராமம் அமைந்துள் ளது. வத்தல்மலை மீது சின்னாங் காடு, ஒன்றியகாடு, பால்சிலம்பு, பெரி யூர், குழியனூர், நாயக்கனூர், கொட் டாங்காடு உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் கிரா மங்கள் அமைந்துள்ளன. இக்கிரா மங்களில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்க ளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆண்டு முழு வதும் இந்த மலைக்கிராமங்களில் குளுமையான காலநிலை நிலவி வருவதால், “மினி ஊட்டி” என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த  மலைப்பகுதிகளில் காபி, மிளகு, கடுகு, ஆரஞ்சு, பலா உள்ளிட்ட பயிர் களை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் சாமை, திணை, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களும் பயி ரிட்டு வருகின்றனர். வத்தல்மலை பகு தியை தமிழக அரசு சுற்றுலாத் தல மாக அறிவித்து, சுற்றுலாத்துறை சார் பில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணி களும் நடைபெற்று வருகின்றன. தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின் றனர். இந்த மலைக்கிராமங்களில் பெரி யூர் பகுதியில் அரசு துவக்கப்பள்ளி  மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன. இதனிடையே,  அவசர உதவிக்கு மருத்துவமனை  வேண்டும் என பல ஆண்டுகளாக அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து  வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கபட்டு, ஒரு மருத்துவர், 4 செவிலியர்கள் மற்றும் 1 உதவியா ளர் என சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த  சுகாதார நிலையத்தில் நோயாளிக ளுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே  அளிக்கபட்டு, தருமபுரி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வந்து மீண்டும் அரசு தலைமை மருத்துவமனைக்கு அங் கிருந்து அனுப்பி வைக்கபட்டு வரு கின்றனர். சில நேரங்களில் வாடகை கார்,  பைக் உள்ளிட்டவைகளை பயன்ப டுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள், நாய் கடி,  விஷ ஜந்துகளால் மிகவும் பாதிக்கப் படுகின்றனர். ஒரு சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படு கிறது. எனவே, வத்தல்மலையில் நிரந் தரமாக ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் சீரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மலைவாழ் மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.