districts

img

உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு சட்டக் கூலி வழங்குக

திருப்பூர், ஜூலை 22- ஊராட்சிகளில் பணி செய்து வரும்  ஓஎச்டி ஆப்பரேட்டர், தூய்மைப் பணியா ளர், தூய்மைக் காவலர்களுக்கு சட்டப் படி கூலி வழங்க கோரி  சிஐடியு ஊரக  வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங் கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தின் முன்பு திங்களன்று ஆர்ப்பட்டம்  நடைபெற்றது. சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்  துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்  பி.பழனிச்சாமி தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி களில் பணி செய்து வரும் ஓஎச்டி ஆப்ப ரேட்டர், தூய்மைப் பணியாளர், தூய்மைக் காவலர்களை காலமுறை ஊழியராக்க  வேண்டும். சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கம் தொடுத்த  வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத் தரவின் அடிப்படையில், அரசாணை 2டி  எண் 62ன்படி ஊதியம் வழங்க வேண் டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.  இதில், சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ், சிஐடியு மாவட்ட  துணைத் தலைவர் கே.உன்னிகிருஷ் ணன், சங்க மாவட்டப் பொருளாளர் பி. ஈஸ்வரன் உள்ளிட்டோர் கோரிக்கைகள்  குறித்து பேசினர். இதில், திருப்பூர் வி.கே. சேகர், பொங்கலூர் சி.விஸ்வநா தன், குடிமங்கலம் எம்.சுப்பிரமணியம், காங்கேயம் எஸ்.புண்ணியமூர்த்தி உட்பட உள்ளாட்சி ஊழியர்கள் திர ளானோர் பங்கேற்றனர். ஆட்சியரகத்தில் சட்டக்கூலி வழங்கு அதேபோல திருப்பூர் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் ஏழு மாடிகளில்  உள்ள பல்வேறு துறை அலுவலகங்கள் மற்றும் கழிப்பிடங்களை 10 பெண்கள், 4 ஆண்கள் என 14 தினக்கூலி பணியாளர்கள் சுகாதாரப் பணிகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி ரூ.753 தினசரி ஊதியமாக கணக்கிட்டு வழங்க வேண் டும். ஆனால் ரூ.400 மட்டுமே தற்போது  வழங்கப்படுகிறது. எனவே 14 பேருக்கு  இந்த அடிப்படையில்.  ஊதியம் கணக் கிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்க  வேண்டும் என மாவட்ட ஆட்சியர், உதவி  இயக்குனர் ஆகியோருக்கு சிஐடியு திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.