districts

img

மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு வீட்டு மனை நிலம் வழங்குக

ஈரோடு, ஜன.1 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்க அமைப்பு கூட்டம் பிரம்மதேசத்தில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பிரம்மதேசத்தில் தமிழ் நாடு அனைத்து வகை மாற்றத்தி றனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கிளை அமைப்புக்கூட்டம் துரைசாமி தலை மையில் நடைபெற்றது. சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆ.சகாதேவன், அந்தியூர் தாலு காச் செயலாளர் பி.முருகன், பொரு ளாளர் கே.அன்னக்கொடி  ஆகியோர்  கலந்து கொண்டனர். இதில், கிராமப்புற வேலை  வாய்ப்பு திட்டத்தில், மாற்றுத்திற னாளிகளுக்கு கடுமையான வேலை கள் கொடுக்கக் கூடாது, ஊதியம்  முறையாக வழங்க வேண்டும். வீட்டு மனை இல்லாத மாற்றுத் திறனாளி கள் குடும்பங்களுக்கு வீட்டு மனை நிலம் வழங்க வேண்டும். நிலம் இருப்பவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மாவட்ட ஆட் சித் தலைவர், வருவாய் கோட்டாட் சியர் தலைமையிலான குறைதீர்ப்பு கூட்டங்கள் முறையாக நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக சுயதொழில் செய்ய அனைத்து வங்கிகளிலும் கடன் வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.  கூட்டத்தில், கிளைத் தலைவராக  துரைசாமி, உதவித் தலைவர்களாக துரையன், பச்சகவுண்டர், செய லாளராக பரமேஸ்வரி, உதவிச் செய லாளர்களாக ராமசாமி, பழனியம் மாள், பொருளாளராக மணிமே கலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.