சேலம், நவ.29- அரசு ஊழியர்களைப்போல, குடும்ப பாதுகாப்பு ஓய்வூ தியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்ட பேரவை கூட்டம், சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் மணி செல்வம் தலைமை வகித்தார். லதா வரவேற்றார். மாநிலச் செயலாளர் பி.மகேஸ்வரி துவக்க உரையாற்றினார். மாவட்ட அமைப்பா ளர் அமராவதி வேலை அறிக்கையையும், நிதிநிலை அறிக் கையையும் முன்வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுரேஷ், மாவட்டத் தலைவர் ந.திருவேரங்கன், பொது சுகாதார அலுவலர் சங்க மாநிலத் துணைத்தலைவர் வி. செல்வம், சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஆர். கலா, மாநில துணைத்தலைவர் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இக்கூட்டத்தில், தேர்தல் கால வாக்குறுதியின்படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்க ளுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களைப்போல, குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவ ராக மணி செல்வம், செயலாளராக அமராவதி, பொருளாள ராக லதா, நான்கு துணைத்தலைவர்கள். மற்றும் நான்கு துணைச்செயலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட மாவட் டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பொதுச்செயலாளர் ஏ.மலர்விழி நிறைவுரையாற்றினார்.