ஈரோடு, மார்ச் 8- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ச.விஜயமனோகரன் மற்றும் துறைவாரியான சங்கத்தி னர் மற்றும் ஊழியர்கள் என திரளானோர் கலந்து கொண்ட னர். கோவை இதேபோன்று, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன் தலைமை வகித்தார். மேலும், மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர் சித்ராதேவி, துணைத்தலைவர் வேலுமணி, அனைத்து துறை ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர் அருணகிரி, என பலர் கலந்து கொண்டனர். இறுதியில், அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொரு ளாளர் நடராஜன் நன்றி கூறினார்.