உதகை, ஜூலை 20- தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியு றுத்தி நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட 400 கிராமங்களிலிருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட் சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பள வில் தேயிலை, 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காபி, 2,400 ஏக்கர் பரப் பளவில் மிளகு, 2 ஏக்கரில் ஏலக் காய், 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மழை காய்கறிகள் விவசாயம் மேற் கொள்ளப்பட்ட வருகின்றன. இதில் தேயிலை விவசாயத்தில் மட்டும் சுமார் 65 ஆயிரம் விவசாயிகள் ஈடு பட்டுள்ளனர். விவசாயிகள் தவிர இதில் ஈடுபடும் கூலித்தொழிலாளர் கள் உட்பட மறைமுகமாகவும், நேர டியாகவும் சுமார் 4 லட்சம் பேர் பய னடைந்து வருகின்றனர். வடஇந்தி யாவில் அசாம் தேயிலையை போல் தென்னிந்தியாவில் நீலகிரி தேயிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அப் படிப்பட்ட தேயிலைக்கு கடந்த 40 வருடங்களாக சரியான விலை கிடைப்பதில்லை. இதனால் பலர் விவசாயம் மேற்கொள்ள முடியா மல் திணறுகின்றனர். ஒரு சிலர் விவசாயத்தை கைவிட்டு, சமவெளி பகுதிக்கு மற்ற வேலைகளுக்கு சென்று விடுகின்றனர்.
எனவே, தேயிலைக்கு குறைந்த பட்ச விலையை நிர்ணயிக்க வலியு றுத்தி, அண்மையில் உதகையில் நாக்குபெட், படுகர் நல சங்கத் தேயிலை தூள் பாதுகாப்பு பிரிவு அமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தேயி லைக்கு குறைந்தபட்ச விலை நிர்ண யம் செய்யாவிட்டால், மாவட்டம் முழுவதும் உள்ள 65 ஆயிரம் விவ சாயிகளை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந் நிலையில், தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய வலியு றுத்தி வியாழனன்று பிரதமர் நரேந் திர மோடி மற்றும் தமிழ்நாடு முதல் வர் ஆகியோருக்கு தபால் அனுப் பும் போராட்டம் தொடங்கப்பட்டுள் ளது. இதேபோல், நீலகிரி மாவட்டத் திற்குட்பட்ட 400 கிராமங்களில் இருந் தும் பிரதமர் மற்றும் முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தினர் கூறுகையில், நீலகிரி மாவட்டத் தில் தேயிலை கிலோவுக்கு ரூ.15 வரை மட்டுமே கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. உற்பத்தி செலவை கணக்கிடும்போது இது கட்டுப்படி ஆகாதால் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, அதிகாரிகளி டம் பலமுறை கோரிக்கை மனுக் கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தேயி லைக்கு குறைந்தபட்ச விலை நிர்ண யம் செய்ய தேவையான நடவடிக் கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று நீதிமன்றமும் உத்தரவிட்டுள் ளது. இதேபோல் ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கு ரூ.22.50 ஆகிறது என்றும், அதிலிருந்து 50 சதவிகிதம் கூடுதலாக நிர்ணயம் செய்து ரூ.33.75 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வேளாண் அறிஞர் சுவாமிநாதன் கமிட்டி அறிக்கை அளித்துள்ளது. ஆனால், அந்த அறிக்கையும் பயன்பாட் டிற்கு வரவில்லை. தற்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 400 கிராமங்களில் இருந்து பிரதமர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பும் போராட்டம் தொடங்கப் பட்டுள்ளது. அம்மனுவில், ரேசன் கடைகள் மூலம் தேயிலைத்தூளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தி உள்ளோம். ஜூலை 31 ஆம் தேதிக்குள் தேயிலைக்கு குறைந்த பட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையெனில், ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று, மாவட்டத்தில் உள்ள தேயிலை விவசாயிகளை ஒன்று திரட்டி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம், என்றனர்.