districts

img

விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

தருமபுரி, மார்ச் 27- கடத்தூர் ஒன்றியம், ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்‌ விளை யாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கடத்தூர் கிளை நூலகம், ஒடசல் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, திரு வள்ளுவர் பொத்தக இல்லம் இணைந்து நடத்திய  மூன்று நாள் புத்தகத் திருவிழா (மார்ச் 26) சனி யன்று நிறைவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக  பரிசளிப்பு விழா நடை பெற்றது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாண வர்களுக்கு பணி நிறைவு பெற்ற ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கே.ஆர்.அப்பாவு பரிசுகளை வழங்கினார். மேலும், புத்தகக் கண் காட்சியில் அதிக புத்தகங்கள் வாங் கிய மாணவர்களுக்கு நூலகர் சி.சரவ ணன் பரிசு வழங்கினார்.  இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை இரா. நிர்மலா தலைமை வகித்தார். திருவள்ளுவர் பொத்தக இல்லம் நிறுவனர் நெடுமி டல், உதவித்தலைமை ஆசிரியர் கே.வேலப்பன், தமிழாசிரியர்கள் ஏ.சந்திரா, சி.பரணி, கே.சித்ரா, டி.சௌந்தரி, உடற்கல்வி ஆசிரியர் ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் டி.ராஜ்குமார் வரவேற்புரை வழங்கினார். முடிவில் ஆசிரியர் எம்.எம்.முருகன் நன்றி கூறி னார்.