தருமபுரி, ஏப்.9- தேர்தல் நேரத்தில் மட்டும் பிர தமர் மோடி தமிழ்நாடு வருகிறார் என தருமபுரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தருமபுரி நாடாளு மன்ற தொகுதி இந்தியா கூட் டணி திமுக வேட்பாளர் வழக்க றிஞர் ஆ.மணியை ஆதரித்து உரை யாற்றுகையில், 1989 ம் ஆண்டு வன்னிய சமூக மக்களுக்கு 20 சத வீத ஒதுக்கீடு வழங்கியது கலை ஞர் 1987 ம் ஆண்டு இட ஒதுக்கீடு கேட்டு போராடியவர்களில் 21 பேரை சுட்டுக்கொன்றது அதிமுக அரசு,21 பேர் இறந்த தியாகிகள் நினைவாக தமிழ்நாடு அரசு விக் கரவாண்டியில் மணிமண்டபம் கட்டிவருகிறது. சமூகநீதி பேசிவரும் பாட்டாளி மக்கள் கட்சி மனுநீதி பேசும் பாஜக உடன் கூட்டிணைப்பு ஏன் என கேள்வி எழுப்பினார். தில்லியில் ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.திறப்புவிழாவில் கனவனை இழந்த வர் என்பதால் குடியரசு தலை வரை அழைக்கவில்லை இதுதான் பாஜகவின் சமூகநிதி,சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு எதி ரானது பாஜக அரசு அரசியல் அமைப்பு சட்டம் சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தவேண்டும் என சொல்கிறது.சமீபத்தில் தொலை காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் அவர் கள் பாஜகவுக்கு எவ்வளவு மதிப் பெண் கொடுப்பீர்கள் என்ற கேள் விக்கு புஜ்யத்திற்க்கு கீழ் என பதில் அளித்தார்.இப்போது தேர்த லுக்காக ஆயிரம் மதிப்பெண் என்று சொல்லுவார்.கடந்த 2021 ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் 10.5 சதவீதம் வன் னியர் சமூக மக்களுக்கு உள் ஒதுக் கீடு என்ற ஒரு சாக்கு போக்கு சொல்லி அதிமுக உடன் பாமக கூட் டணி வைத்தனர்.சட்டரீதியான முறையில் உள் ஒதுக்கீடு செய்யா ததால் அது நடைமுறைக்குவர வில்லை.திமுக சட்ட போராட்டம் நடத்தி 10.5 உள்ஒதுக்கீடு பெற்று தருவோம் என வாக்குறுதிய ளித்தது. முன்னதாக, சேலம் நாடாளு மன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணப தியை ஆதரித்து திமுக இளைஞ ரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குரங்குச்சாவடி பகுதி யில் தேர்தல் பரப்புரை மேற் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சேலத்தில் நடை பெற்ற இளைஞரணி மாநாடு 80 சத விகிதம் தான் வெற்றி. சேலம் தொகு தியில் போட்டியிடும் திமுக வேட்பா ளர் 3 லட்சம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றால்தான் மாநாடு 100 சதவீதம் வெற்றி பெற்ற தாகும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.65 ஆக குறைக்கப் படும். சமையல் எரிவாயு விலையை ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து விட்டு, தேர்தல் வந்ததால் 100 ரூபாய் குறைத்துள்ளார் மோடி. மோடி சுட்ட வடையை அவரே சாப்பிட்டு விடுவார். இந்தியா கூட் டணி வெற்றி பெற்றால் நாடு முழுவ தும் சுங்கச்சாவடிகள் அகற்றப்ப டும். யார் காலிலும் தவழ்ந்து போய் ஸ்டாலின் முதல்வராகவில்லை. ஜெயலலிதா, சசிகலா மற்றும் ஒட்டு மொத்த தமிழ்நாடு மக்களுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழ னிச்சாமி. ஆட்சிக்கு வந்த முதல் 5 மாதம் கொரோனாவுடன் திமுக அரசு போராடியது. அப்படி இருந் தும் முதல் கையெழுத்து பெட் ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார் முதல்வர். இரண்டா வது கையெழுத்து மகளிருக்கு கட்ட ணமில்லா பேருந்து பயணம். தமிழ் நாட்டை பார்த்து அண்டை மாநி லத்திலும் இந்த திட்டத்தை செயல் படுத்தப்பட்டுள்ளது. அனைத்தையும் மோடி தூக்கி அவரது நண்பர் அதானியிடம் கொடுத்துள்ளார். கலைஞரின் 101 ஆவது பிறந்தநாள் பரிசாக தமிழ் நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 நாடாளுமன்ற தொகு திகளில் வெற்றி பெற வேண்டும். அனைத்து மகளிருக்கும் நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை கிடைக் கும். கலைஞர், ஜெயலலிதா ஆகி யோர் உயிரோடு இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழை யவிடவில்லை. ஆனால், கடந்த எடப்பாடி அரசு நீட் தேர்வை திணித் துவிட்டது. தேர்தல் நேரத்தில் மட் டுமே மோடி தமிழ்நாடு வருகிறார். தேர்தல் முடியும் வரை மோடி தமிழ் நாட்டில் தங்கினாலும், தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். இவ்வாறு உதயநிதி பேசினார்.