districts

img

நீலகிரி மலைப்பூண்டின் விலை உயர்வு

மேட்டுப்பாளையம், ஆக.18- மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் வெள்ளைப்பூண்டு ஏல சந்தையில் நீலகிரி பூண்டு என்றழைக்கப்படும் மலைப்பூண்டின் விலை உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பூண்டு சந்தைக்கு மலை மாவட்டமான நீல கிரியில் விளையும் வெள்ளைப்பூண்டு மட்டு மின்றி ராஜஸ்தான், மேற்குவங்கம், கர்நா டகா போன்ற வெளி மாநில பூண்டுகளும் கொண்டு வரப்பட்டு ஏல முறையில் மொத்த  வியாபாரிகளுக்கு விற்பனை செய்யபடு வது வழக்கம். இதில் நீலகிரியில் விளை யும் மலைப்பூண்டுக்கு மணமும், காரத்தன் மையும், மருத்துவ குணங்களும் அதிகம் என் பதால் இதற்கு எப்போதும் விலை கூடுதலாக கிடைப்பது வழக்கம். தற்போது நீலகிரியில் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், மலைப்பூண்டின் வரத்து அதிகரிக்க துவங்கி யுள்ளது. ஆனால், இதன் தேவை காரண மாக மலைப்பூண்டின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சராசரியாக மலைப் பூண்டின் விலை கிலோவிற்கு 150 முதல் 250 ரூபாய் வரை இருக்கும் நிலையில், தற்போது இதன் விலை கிலோவிற்கு 350 முதல் 450 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் பூண்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள னர். இமாச்சல் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநில மொத்த வியாபாரிகள் இதனை விதைப்பூண்டாக வாங்கி செல்ல மேட்டுப்பாளையம் சந்தைக்கு வருவதால் பூண்டின் கொள்முதல் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. தொடர்ந்து விலை ஏறு முகத்தில் இருப்பதால் விவசாயிகள் பூண்டு  அறுவடையில் ஆர்வம் காட்டி வருகின்ற னர். வரத்து மேலும் அதிகரித்தால் விலை  சற்றே குறைய வாய்ப்புள்ளது.