இதனிடையே மாநாடு துவங்கும் முன்பு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது, அங்கு குவிக்கப்பட்டிருந்த போலிசார் பேரணி நடத்த அனுமதி கிடையாது, மீறினால் கைது செய்வோம் என மிரட்டினர். இதனால், ஆவேசமடைந்த மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் உள் ளிட்ட மாணவர் சங்க தலைவர்கள் சுதந்திர நாட்டில் பேரணி செல்வதற்கு அனுமதி மறுப்பது என்பது ஜனநாயக படுகொலை என போலிசாருடன் வாதிட்டார். இருப்பினும் ஜனநாயக இயக்கங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையோ கடமையாக கொண்ட கோவை மாநகர போலிசார் அரஜாக முறையில் மாணவர்களை கைது செய்ய முற் பட்டனர். அப்போது போலீசாருக்கும், மாணவர் சங்கத்தினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செய லாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தலையிட்டு போலிசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கைது நடவடிக்கையை போலிசார் கைவிட்டனர். பின்னர் மாணவர் சங்கத்தினர் மாநாடு நடைபெறும் மண்டபத்திற்கு சென்று மாநாட்டை நடத்தினர். மாண வர் சங்கத்தினருடன் போலிசார் மேற்கொண்ட நடவடிக்கை காந்திபுரம் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே மாநாடு துவங்கும் முன்பு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது, அங்கு குவிக்கப்பட்டிருந்த போலிசார் பேரணி நடத்த அனுமதி கிடையாது, மீறினால் கைது செய்வோம் என மிரட்டினர். இதனால், ஆவேசமடைந்த மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் உள் ளிட்ட மாணவர் சங்க தலைவர்கள் சுதந்திர நாட்டில் பேரணி செல்வதற்கு அனுமதி மறுப்பது என்பது ஜனநாயக படுகொலை என போலிசாருடன் வாதிட்டார். இருப்பினும் ஜனநாயக இயக்கங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையோ கடமையாக கொண்ட கோவை மாநகர போலிசார் அரஜாக முறையில் மாணவர்களை கைது செய்ய முற் பட்டனர். அப்போது போலீசாருக்கும், மாணவர் சங்கத்தினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செய லாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தலையிட்டு போலிசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கைது நடவடிக்கையை போலிசார் கைவிட்டனர். பின்னர் மாணவர் சங்கத்தினர் மாநாடு நடைபெறும் மண்டபத்திற்கு சென்று மாநாட்டை நடத்தினர். மாண வர் சங்கத்தினருடன் போலிசார் மேற்கொண்ட நடவடிக்கை காந்திபுரம் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது.
இம்மாநாட்டில், அரசு உதவி பெறும் கலைக்கல்லூரியில் அரசு நிர்ணயம் செய்த கட்டணங்களை பெற வேண்டும். விடுதி மாண வர்களின் உணவுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். புலியகுளம் பெண்கள் அரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை களை அமைத்து தர வேண்டும். பள்ளி, கல் லூரிகளில் மாணவிகளுக்கு எதிராக நடை பெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், அனைத்து கல்வி வளாகங்களிலும் விசாக கமிட்டி அமைக்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட் டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண் டும். தனியார் கல்வி நிலையங்களில் தொட ரும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கோவையில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளை ஆய்வு செய்து அடிப்படை வச திகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக சந்துரு, செயலாளராக அசாரு தீன், துணைத்தலைவராக கயல்விழி, சந் தியா, துணைச்செயலார்களாக சந்தோஷ், மதுசங்கர் உட்பட 27 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் நிறை வுரையாற்றினார். இதைத்தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், தமுஎகச மாவட்ட செயலாளரும், மாணவர் சங்க முன் னாள் மாவட்ட தலைவருமான அ.கரீம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைச்செயலாளர் வினித் நன்றி கூறி னார்.