districts

img

மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

திருப்பூர், மார்ச் 9 - திருப்பூரில் உழைக்கும் மகளி ருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ்  57 பயனாளிகளுக்கு ரூ.14.25 லட்சம் மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்களை யும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்டம், வெள்ள கோவில் ஊராட்சி ஒன்றியம் வே.பச்சா பாளையம் கிராமத்தில் பொன்பரப்பி -  கம்பிளியம்பட்டி சாலை முதல் வேலூர் வரை ரூ.17.60 லட்சம் மதிப்பீட்டில் தார்  சாலை புதுப்பித்தல் மற்றும் மயில்ரங் கம் சாலை முதல் பாப்பா வலசு வரை  ரூ.27.00 லட்சம் மதிப்பீட்டில் தார் சலை  புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். அத்துடன், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாக னங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 57  பயனாளிகளுக்கு ரூ.14.25 லட்சம் மதிப் பீட்டில் இருசக்கர வாகனங்களையும் அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வரு வாய் கோட்டாட்சியர் குமரேசன், அம ராவதி வடிநிலக் கோட்டம் செயற் பொறியாளர் முருகேசன், வெள்ள கோவில் நகராட்சி தலைவர் எம்.கனிய ரசி, நகராட்சி துணைத் தலைவர் விஜய லட்சுமி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.