சேலம், ஜன.29- ஆட்டோவில் தவற விட்ட 30 பவுன் நகையை தம்பதியரிடம் பத்திரமாக திரும்ப ஒப்படைத்த சிஐ டியு ஆட்டோ ஓட்டுன ருக்கு சேலம் பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரி வித்து வருகின்றனர். சேலம் ஜங்ஷன் பகு தியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தராஜ். சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார். இவரது ஆட் டோவில் சென்னையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது மனை வியும் அருகில் உள்ள அம்மாபாளை யம் பகுதிக்கு சென்றுள்ளனர். அப் போது அவர்கள் ஆட்டோவிலேயே ஒரு பையை தவற விட்டு சென்று விட்டனர். இதில் 30 பவுன் தங்க நகை இருந்துள்ளது. அதனை கண்ட ஆட்டோ ஓட்டு நர் கோவிந்தராஜ் மீண்டும் ஜெயப்பிர காஷ் ஜங்ஷன் ஆட்டோ ஸ்டாண்ட் வரும் வரை காத்திருந்து அந்த பையை ஒப்படைத்தார். பையை தவறவிட்ட ஜெயபிரகாஷ் இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தராஜை பாராட்டினார். மேலும், இதுகுறித்து அறிந்த அப் பகுதி பொதுமக்கள், ரயில்வே அதிகா ரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோ ரும் தங்களது பாராட்டுகளை தெரி வித்தனர்.