districts

img

முன்னறிவிப்பின்றி தபால் நிலையம் மூடல்: மக்கள் தர்ணா

நாமக்கல், மே 8- திருச்செங்கோடு அருகே எந்த வித முன்னறிவிப்பின்றி தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண் டித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடு பட்டனர். தகவல்களை பரிமாறிக்கொள்ள ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தபால் மற்றும் தந்தி முறை அம லுக்கு வந்தது. இதன் மூலம் பொது மக்கள் தங்களுடைய தகவல்களை அடுத்தவர்களுக்கு பரிமாறிக் கொள்ள ஒரே சாதனமாக தபால்  மற்றும் தந்தி இருந்து வந்த நிலை யில் தொலைபேசி வந்தது. ஆனா லும், தபால் துறை நலிவடைந்து விட வில்லை. தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைக்கு வந்த போது, ஒரு ரூபாயில் இந்தியா முழுக்க பேசிக் கொள்ளலாம் என்ற தொலைபேசி வசதி, ஆங்காங்கே எஸ்டிடி பூத்துகள், பேக்ஸ் என வசதிகள் விரிவடைந்த போது, தபால் துறை சற்றே நலிவடைய தொடங்கியது. ஆனாலும் பதிவுத்  தபால்கள், அரசுத்துறை தகவல் கள், பதிவு செய்யப்பட வேண்டிய தகவல்கள், என சிலவற்றை தபால் துறை மூலமாகவே செய்ய வேண்டி  இருந்ததால், தொடர்ந்து தபால் துறை செயல்பட்டு வந்தது. தற்போ தைய அறிவியல் சாதனங்களின் வளர்ச்சியின் காரணமாக, ஆண்ட் ராய்டு செல்போன்கள், மெசேஜ், வாட்ஸ் அப், பேஸ்புக் என தகவல்  தொழில்நுட்ப வசதி விரிவடைந் துள்ளது. இதனால் தகவல் விநாடிக் குள் கிடைத்துவிடும் என்கிற நிலை  உருவானதன் பின்னால் அஞ்சலகத் துறை முற்றிலுமாக நலிவடைந்தது. இதனால் அஞ்சலகத்துறை செல வினங்களை குறைக்கும் வகையில் தபால் பரிவர்த்தனைகள் இல்லாத தபால் நிலையங்களை நாடு முழுவ தும் மூட ஒன்றிய அரசு முடிவெடுத் ்தது. கோவை மண்டலத்துக்குட் பட்ட பகுதியில் 91 தபால் நிலையங் களை மூட உத்தரவிடப்பட்டது. அதன் படி திருச்செங்கோடு பகுதியில் சாணார்பாளையம் மற்றும் நெசவா ளர் காலனி பகுதியில் உள்ள தபால் நிலையங்கள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நெசவாளர் காலனி தபால் நிலையத்தை பொருத்த வரை 40 ஆண்டுகளுக்கு முன் அங்கு தபால் நிலையம் வேண்டும் என நினைத்த பொதுமக்கள் ஊர் இடத்தை ஒதுக்கி தேவையான வச திகளை செய்து கொடுத்து குறைந்த வாடகைக்கு கட்டடத்தை கொடுத்து, தபால் நிலையம் தொடர்ந்து அங்கே இயங்கி வருகிறது. அங்குள்ள பொது மக்கள் சுமார் 5000க்கும் மேற்பட்ட வர்கள் வரவு செலவு கணக்கு வைத் துள்ளனர். மூன்று கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட்டாக 4 கோடி ரூபாயும் அங்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எந்த முன்னறிவிப் பும் இல்லாமல் டெபாசிட்டாளர் கள், கணக்காளர்கள் பொதுமக் கள், இடம் கொடுத்தவர்கள் என யாருக்கும் எந்தத் தகவலும் கொடுக் காமல் இரவோடு இரவாக தபால் நிலையத்தை காலி செய்து விட்ட னர். இதனையறிந்து அதிர்ச்சிய டைந்த பொதுமக்கள் முன்னறி விப்பு இல்லாமல் திடீரென காலி செய்ததை கண்டித்தும், தங்களது பகுதிக்கு அவசியம் தபால் நிலை யம் வேண்டும் என வலியுறுத்தி யும் 5 ஆவது வார்டு நகர்மன்ற உறுப் பினர் ராஜா தலைமையில் திருச் செங்கோடு தலைமை தபால் நிலைய அலுவலர் இந்திராவிடம் மனு அளிக்க வந்தனர். ஒன்றிய அரசின் முடிவு என்ப தால் தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும், நாமக் கல்லில் உள்ள கண்காணிப்பு அலு வலரிடம் மனு கொடுக்க வேண்டும் எனக்கூறி மனுவை பெற மறுத் தார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் தலைமை தபால் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதன்பின் தலைமை தபால் அலுவலர் இந்திரா, மனுவை பெற் றுக்கொண்டதோடு கண்காணிப்பு  அலுவலரிடமும் மனுவை கொடுக் கச் சொல்லி பொதுமக்களை கேட் டுக் கொண்டார். நாடு முழுவதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாலும், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாலும் பொதுமக்களின் கோரிக்கையை துறை அலுவலர் களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப் பதாக உத்தரவாதம் அளித்ததன்  பேரில், போராட்டம் விலக்கிக் கொள் ளப்பட்டது.