திருப்பூர், நவ. 24 – திருப்பூரில் மக்கள் பங்கேற்புடன், பொங் கல் திருவிழாவை 2024 ஜனவரி 15, 16 தேதிக ளில் சிறப்பாக நடத்துவது என்று நொய்யல் பண்பாட்டு அமைப்பு முடிவு செய்துள்ளது. நொய்யல் பண்பாட்டு அமைப்பின் ஆலோ சனைக் கூட்டம் தனியார் அரங்கில் வெள் ளின்று மாலை அமைப்பின் துணைத் தலை வர் வே.முத்துராமலிங்கம், துணைத் தலை வர் மோகன் கார்த்திக் ஆகியோர் தலைமை யில் நடைபெற்றது. இதில் செயலாளர் ஆர். ஈஸ்வரன் வரக்கூடிய 2024 தை பொங்கல் திருவிழாவை மக்கள் பங்கேற்புடன் விமர் சையாக நடத்துவது குறித்து ஆலோசனைகளை முன் வைத்தார். நிர்வாகிகள் பி. ஆர்.நடராஜன், மு.திருப்பதி, மூத்த தலைவர் எம்பரர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 2023ஆம் ஆண்டு தைப் பொங்கல் திருவிழவை சிறப்பாக நடத்திய அனுப வத்தின் அடிப்படையில், 2024ஆம் ஆண்டும் பொங்கல் திருவிழாவை, திருப்பூர் மாநக ராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக நடத்துவது, தமிழகத்தின் முன்னணி கலை இலக்கிய அமைப்புகளை வரவழைத்து ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் பொங் கல் விழாவை மிகச்சிறப்பாக மக்கள் திருவி ழாவாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட் டது. இதற்கான பணிக்குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இக்கூட்டத்தில் நொய்யல் பண் பாட்டு அமைப்பினர் பங்கேற்றனர்.