பொள்ளாச்சி, ஜூன் 21- பொள்ளாச்சியில் நடைபெற்ற மாட்டுச்சந்தையில் ரூ.3 கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்ற தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள் ளாச்சி - மீன்கரை சாலையிலுள்ள மாட்டுச்சந்தை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெ றும். இதில், பொள்ளாச்சி மட்டு மின்றி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலி ருந்தும் மாட்டு வியாபாரிகள் மாடு களை வாங்குவது, விற்பது உள் ளிட்ட வர்த்தகம் செய்து வருகின்ற னர். இந்நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற வாரச்சந்தையில் 2 ஆயிரத்து 500 லாரிகளில் மாடு கள் விற்பனைக்கு கொண்டு வரப் பட்டன. இதில் ஒரு நாட்டு மாடு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.45 ஆயி ரம் வரையிலும், காளை மாடு ரூ.60 ஆயிரத்திலிருந்து ரூ.65 ஆயிரம் வரையிலும், நாட்டு எருமைகள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும், முரா எருமை (ஜெர்சி) ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரம் வரையிலும், ஜெர்சி பசு மாடுகள் ரூ.30 ஆயிரத்திலி ருந்து ரூ.35 ஆயிரம் வரையிலும், எச்எப் (ஜெர்சி மாடுகள்) ரூ.45 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப் பட்டன. இதன் முடிவில் ரூ.3 கோடி அளவிற்கு செவ்வாயன்று வர்த்த கம் நடைபெற்றது. ஜூலை 10 ஆம் தேதியன்று பக்ரீத் பன்டிகை வருவ தால் கேரளா மாட்டு வியாபாரி கள் ஆர்வத்துடன் மாடுகளை வாங் கிச் சென்றனர். கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் வர்த்த கம் அதிகரித்துள்ளதாக மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் தெரி வித்தனர்.
அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தல்
இதுகுறித்து தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலா ளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிர் வாகிகள் கூறுகையில், மாட்டு சந் தைக்கு ஒரு நாளுக்கு முன்பே இர விலேயே மாட்டு வியாபாரிகள் மாடுகளுடன் சந்தைக்கு வந்து விடுகின்றனர். சந்தையின் இரு புறங்களிலும் கேட் வசதி இல்லாத தால் மாடுகள் திருடு போகும் அபா யம் உள்ளது. எனவே, மாட்டுச்சந் தையின் இருபக்கமும் நுழைவு வாயிலில் கேட் அமைத்து தர வேண்டும். இரவு நேரங்களில் மாட் டுச் சந்தையில் குற்றச் செயல்க ளில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டு வியா பாரிகள் தங்குவதற்கும், மாடு களை பத்திரமாக கட்டி வைப்ப தற்கும், நகராட்சி சார்பில் பெரிய அளவிலான கூடாரம் அமைத்து தர வேண்டும். மேலும், மழைக்காலங்களில் மழைநீர் முழுவதும் மாட்டுச்சந் தையில் தேங்கி நிற்பதால் மிகப் பெரிய சிரமத்திற்கு மாட்டு வியா பாரிகள் ஆளாகி வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படை யில் மழைநீர் வடிகால் மாட்டுச் சந்தையைச் சுற்றி அமைக்க வேண் டும். மாட்டுச்சந்தையில் பொதுக் கழிப்பிடம், குடிநீர் வசதி ஏற்ப டுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.