districts

img

பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோபி, நவ.29- கோபிசெட்டிபாளையம் அருகே பட்டியலின இளை ஞர்கள் மீது கொலை வெறி  தாக்குதல் நடத்தியவர்களை வன்கொடுமை தடுப்பு சட் டத்தின் கீழ் கைது செய்ய  வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் இணைந்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள பொலவக்காளிபாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார், கிருபாகரன். பட்டியலினத்தை சேர்ந்த இவர்கள் மீது, சில தினங்களுக்கு முன்  வெங்கமேடு பகுதியில் கோழி திருடிய தாக சாதிய வன்மத்துடன் 20க்கும் மேற்பட் டோர் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள் ளனர். இத்தகைய மோசமான செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், சாதிய வன்மத்துடன் கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது  செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோபி பேருந்து நிலையம் அருகே பல்வேறு அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட் டச் செயலாளர் மிசா.தங்கவேல் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடாசலம், சிபிஐ  ஒன்றியச் செயலாளர் கனகராஜ், மார்க்சிஸ்ட்  கட்சியின் தாலுகா கமிட்டித் தலைவர்  வி.கே.துரைசாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் பொருளாளர் மாரி முத்து, பெருமாள், திராவிடர் விடுதலை கழக  மாநில நிர்வாகி இராம.இளங்கோவன், தமிழ்  புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி, பொல்லான் பேரவை வடி வேல்ராமன் மற்றும் மகளிர் அணி அமைப்பு  உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த பலர்  கலந்து கொண்டனர்.