தாராபுரம், ஜூலை 4 - தாராபுரம் பகுதியில் சட்டவிரோத மது விற் பனையால் பகல் நேரத்திலேயே மது அருந்திவிட்டு சாலையில் பலர் மயங்கி கிடக் கிறார்கள். இதுகுறித்துத் தெரிந்தும் கண்டு கொள்ளாத காவல்துறையினரின் நடவ டிக்கை பொதுமக்கள் மத்தியில் அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் நகர் பகுதியில் 10க்கும் மேற் பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகி றது. இந்த கடைகள் பகல் 12 மணிக்குத் திறக் கப்பட்டு இரவு 10 மணிவரை மது விற்பனை யில் ஈடுபடுவது வழக்கம். இரவு 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மது விற்பனை நடைபெறாது. இதைச் சாதகமாக பயன்ப டுத்தி கொண்டு சில நபர்கள் சட்டவிரோத மது விற்பனையில் நேரடியாகவும், இருசக்கர வாகனங்களில் வீடுகளுக்கு சென்றும் விற்ப னையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலர் காலை நேரத்தில் மது அருந்திவிட்டு நக ரின் பிரதான சாலைகளில் கிடக்கின்றனர். இத னால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. தாராபுரம் பகுதியில் உள்ள பொள்ளாச்சி சாலை டாஸ்மாக், நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் உள்ள என்.என். பேட்டை வீதி டாஸ்மாக் கடை, காவல் நிலை யம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளின் முன்பு சட்டவிரோத மதுவிற்பனை அதிகள வில் நடைபெறுகிறது. டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக தனிநபர்களுக்கு மது விற் பனை செய்யக்கூடாது என்ற விதி இருந்தும் சில டாஸ்மாக் கடை ஊழியர்கள் அதிக பணம் பெற்றுக்கொண்டு கேஸ் கணக்கில் மொத்த மாக கொடுக்கின்றனர். இதை வாங்கி சட்டவி ரோத மது விற்பனை செய்யும் நபர்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ.100 அதிகம் வைத்து விற் பனை செய்கின்றனர். நாளொன்றுக்கு சுமார் 1000 பாட்டில்கள் வரை விற்பனை செய்யப்ப டுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் ரூ.1 லட்சம் வரை இந்த நபர்கள் முறை கேடா கச் சம்பாதிக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் அருள்முரு கன் என்பவர் தெரிவிக்கையில், இந்த சட்ட விரோத மதுவிற்பனை குறித்து மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் காவல்துறையினரிடம் இதுகுறித்து தெரி விக்கும் நபர்கள் குறித்து சட்டவிரோத நபர்க ளுக்கு உடனடியாக தகவல் தெரிந்துவிடு கிறது. அந்த நபர்கள் சம்பந்தப்பட்டவர்க ளுக்கு தொலைப்பேசி மூலம் பேரம் பேசுகின் றனர்
அல்லது மிரட்டல் விடுக்கின்றனர். இதன் மூலம் காவல்துறையினருக்கும் சட்டவி ரோத மது விற்கும் நபர்களுக்கும் உள்ள தொடர்பு வெளிப்படையாகவே தெரிகிறது. 24 மணிநேரமும் கிடைக்கும் மதுவிற்குஅடிமையாகி வேலைக்குச் செல்வ தைப் பலர் விட்டுவிடுகிறார்கள். இதனால் இளைஞர்கள் உள்பட ஏராளமானவர்கள் வாழ்வை தொலைத்துவிட்டனர். இவர்க ளால் சொந்த குடும்பமும் சீரழிந்து சமுக அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் அச்சு றுத்தல் ஏற்பட்டு அரசின் பெரும் வருவாய் ஆதாரமாக உள்ள டாஸ்மாக் வருவாய்க்கும் இழப்பு ஏற்படுகிறது எனத் தெரிவித்தார். இது குறித்து பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வ லர்கள் நேரடியாக காவல்துறையின் கவனத் திற்கு கொண்டு சென்றும், குறைந்தபட்சம் காவல்நிலையம் அருகில் நடக்கும் சட்டவி ரோத மதுவிற்பனை கூட தடுத்து நிறுத்தப்பட வில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய் வாளர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் மௌனம் காத்து வருவது பொதுமக்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருள்முருகன் வேண்டுகோள் விடுத் துள்ளார். (ந.நி)